December 7, 2025, 3:59 AM
24.5 C
Chennai

மே.வங்கத்தில் 8 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் போக்டுய் கிராமத்தில்
எட்டு பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ராம்புஹ்ட் வட்டார தலைவர் அனருல் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவரது மொபைல் போன் எண்ணை கண்காணித்த போலீசார், தாராபித் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்ட ஹுசைனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட எட்டு பேர் மீதும், எரிப்பதற்கு முன் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்., துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக், 23ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பர்ஷல் கிராமத்துக்கு அருகில் உள்ள போக்டுய் கிராமத்துக்கு, அன்று மாலையில் வந்த ஒரு கும்பல், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிர் இழந்த எட்டு பேரும், முன்னதாக கடுமையாக தாக்கப்பட்டிருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. கிராமத்துக்குள் புகுந்த அந்த கும்பல், மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அவர்கள் வீட்டுக்குள் சென்று கதவை மூடியவுடன், அந்த வீட்டிற்கு தீ வைத்துள்ளது.

முதல்வர் மம்தா -பானர்ஜி நேற்று போக்டுய் கிராமத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அப்போது அவர் தெரிவித்ததாவது, தீயில் கருகி உயிரிழந்தோர் குடும்பத்தில், தலா ஒருவருக்கு அரசு வேலை, 5 லட்சம் ரூபாய் நிவாரணம், சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க, தலா 2 லட்சம் ரூபாய், காயம் அடைந்தோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த கொடூர சம்பவத்தில், தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாநிலம் முழுதும் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்துள்ளோரை பிடிக்க, சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றார்.

gallerye 212443430 2990151 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories