மே.வங்கத்தில் 8 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் போக்டுய் கிராமத்தில்
எட்டு பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ராம்புஹ்ட் வட்டார தலைவர் அனருல் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவரது மொபைல் போன் எண்ணை கண்காணித்த போலீசார், தாராபித் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்ட ஹுசைனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட எட்டு பேர் மீதும், எரிப்பதற்கு முன் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்., துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக், 23ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பர்ஷல் கிராமத்துக்கு அருகில் உள்ள போக்டுய் கிராமத்துக்கு, அன்று மாலையில் வந்த ஒரு கும்பல், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

இந்நிலையில், உயிர் இழந்த எட்டு பேரும், முன்னதாக கடுமையாக தாக்கப்பட்டிருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. கிராமத்துக்குள் புகுந்த அந்த கும்பல், மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அவர்கள் வீட்டுக்குள் சென்று கதவை மூடியவுடன், அந்த வீட்டிற்கு தீ வைத்துள்ளது.

முதல்வர் மம்தா -பானர்ஜி நேற்று போக்டுய் கிராமத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அப்போது அவர் தெரிவித்ததாவது, தீயில் கருகி உயிரிழந்தோர் குடும்பத்தில், தலா ஒருவருக்கு அரசு வேலை, 5 லட்சம் ரூபாய் நிவாரணம், சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க, தலா 2 லட்சம் ரூபாய், காயம் அடைந்தோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த கொடூர சம்பவத்தில், தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாநிலம் முழுதும் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்துள்ளோரை பிடிக்க, சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றார்.

gallerye 212443430 2990151 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories