இன்றும் தொடரும் பந்த்..தமிழகத்தில் பஸ்கள் அதிகளவில் இயக்கம்..

மத்திய அரசின் சில திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்ந்த நிலையில் சென்னை கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ்கள் 70சதத்திற்கும் மேல் இயங்கியது.

தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக சென்னையில் நேற்று பேருந்து சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் வழக்கம் போல் மாநகர பேருந்துகள் இயங்கி வருகின்றன. 
சென்னையில் மட்டும் மாநகர போக்குவரத்துக் கழகத்தால் நாள் ஒன்றுக்கு 3,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் உரிய நேரத்தில் அனைத்து பேருந்துகளும் புறப்பட்டு விட்டதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஆட்டோ ஒட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஓடுகிறது. இதில் 70 சதவீத பஸ்கள் இன்று ஓடின. காலை 6 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்த ஊழியர்கள், அங்கிருந்து பஸ்களை வெளியே எடுத்து இயக்கத் தொடங்கினர்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

6 மணி முதலே காந்திபுரம் பஸ்நிலையம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ்நிலையங்களுக்கு பஸ்கள் வரத்தொடங்கின. இதனால் எந்தவித சிரமும் இன்றி பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

இதேபோல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் காலை முதலே அரசு பஸ்கள் ஓடின.

இன்று நீலகிரி மாவட்டத்திலும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடின. பஸ்கள் ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
மதுரை நெல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இரண்டாவது நாள் பொது வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்றுள்ளனர். ஊழியர்கள் வராததால் பணம் டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புவது வழக்கம். கடந்த 26ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை, 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக 2 நாட்கள் விடுமுறை வந்தது. நேற்றும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. பணம் இருந்த ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து சென்றனர். இன்று 2வது நாளாக வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால், இயங்கி வந்த ஒரு சில ஏடிஎம்களின் சேவையும் இன்று பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!
images 2022 03 26T153704.615 2 - 2026
bus - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories