மருத்துவமனையில் எலி கடித்து இதயநோயாளி பலி..

தெலுங்கானாவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவரை எலி கடித்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துமவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்ரீநிவாஸ்(38) இதய நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்த அந்த நபரை எலி கடித்துவிட்டதாம். இதையடுத்து அவரது நிலை மோசமானதை அடுத்து, அவர் நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆனால், ஸ்ரீநிவாசனின் சசோதரர், மார்ச் 30ம் தேதி அன்று எலி கடித்த சம்பவம் நடந்துள்ளது. என் சகோததரை எலிகள் கடித்தபோது, அவருக்கு மோசமாக ரத்தம் வந்தது. படுக்கை முழுவதும் ரத்தமாக இருந்தது. அதனால் புகார் தெரிவித்தேன் என்றார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நிஜாம்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸின் (நிம்ஸ்) இயக்குனர் டாக்டர் கே மனோகர் கூறியுள்ளதாவது,

ஸ்ரீநிவாஸூக்கு நாள்பட்ட மதுப்பழக்கம் இருந்துள்ளது. அவரது கல்லீரல் கணையம் மற்றும் சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. வென்டிலேட்டரில் இருந்த அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். நிம்ஸ் செல்லும் வழியில் கூட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, நாடித் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிகவும் மோசமாக இருந்தது. இந்த சிக்கல்களால்தான் மரணம் நிகழ்ந்தது. எலி கடித்ததால் அல்ல.என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், எம்ஜிஎம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் துறைத் தலைவர் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

images 2022 04 02T141229.145 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories