ஈரோடு அருகே அடக்கம் செய்யப்பட்ட முதியவர் திரும்பி வந்ததால் பரபரப்பு..

ஈரோடு அருகே அடக்கம் செய்யப்பட்ட முதியவர் திரும்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவர் கர்நாடகா, ஈரோடு போன்ற இடங்களில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வருபவர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சென்ற மூர்த்தி வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். இதனால் அவரை தேடி மூர்த்தியின் மகன்கள் கார்த்திக், பிரபுகுமார் இருவரும் சுற்றித் திரிந்தும் கிடைத்தப்பாடில்லை.

இந்த நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே சுமார் 55 வயதுடைய ஆணின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக விரைந்துச் சென்றிருக்கிறார்கள் மூர்த்தியின் மகன்கள்.

ஆனால் முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அந்த சடலத்தின் உடலமைப்பு தங்களது தந்தையை போன்று இருந்ததால் அதனை கைப்பற்றி துறையம்பாளையம் கொண்டுச் சென்று உரிய சடங்குகளை செய்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இதனால் தங்களது தந்தை இறந்துவிட்டதாக சோகத்தில் மூண்டிருந்த கார்த்திக், பிரபுகுமார் குடும்பத்தினருக்கு அன்றிரவே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கூடிய சம்பவம் காத்திருந்திருக்கிறது.

அதன்படி இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி உயிருடன் திரும்பி வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்திருக்கிறார்.

இதனிடையே இந்த சம்பவம் ஊர் முழுவதும் பரவியதால் உடனடியாக விரைந்து வந்தபோலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மூர்த்தி இறந்துவிட்டதாக நினைத்து அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கார்த்திக்கும் பிரபுகுமாரும் அடக்கம் செய்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலிஸார் அனுப்பியுள்ளனர்.

sathyamangalam - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories