ஈரோடு அருகே அடக்கம் செய்யப்பட்ட முதியவர் திரும்பி வந்ததால் பரபரப்பு..

ஈரோடு அருகே அடக்கம் செய்யப்பட்ட முதியவர் திரும்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் துறையம்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவர் கர்நாடகா, ஈரோடு போன்ற இடங்களில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வருபவர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சென்ற மூர்த்தி வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். இதனால் அவரை தேடி மூர்த்தியின் மகன்கள் கார்த்திக், பிரபுகுமார் இருவரும் சுற்றித் திரிந்தும் கிடைத்தப்பாடில்லை.

இந்த நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே சுமார் 55 வயதுடைய ஆணின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக விரைந்துச் சென்றிருக்கிறார்கள் மூர்த்தியின் மகன்கள்.

ஆனால் முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அந்த சடலத்தின் உடலமைப்பு தங்களது தந்தையை போன்று இருந்ததால் அதனை கைப்பற்றி துறையம்பாளையம் கொண்டுச் சென்று உரிய சடங்குகளை செய்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.

இதனால் தங்களது தந்தை இறந்துவிட்டதாக சோகத்தில் மூண்டிருந்த கார்த்திக், பிரபுகுமார் குடும்பத்தினருக்கு அன்றிரவே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கூடிய சம்பவம் காத்திருந்திருக்கிறது.

அதன்படி இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி உயிருடன் திரும்பி வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்திருக்கிறார்.

இதனிடையே இந்த சம்பவம் ஊர் முழுவதும் பரவியதால் உடனடியாக விரைந்து வந்தபோலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மூர்த்தி இறந்துவிட்டதாக நினைத்து அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கார்த்திக்கும் பிரபுகுமாரும் அடக்கம் செய்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலிஸார் அனுப்பியுள்ளனர்.

sathyamangalam - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories