சட்டசபையில் அதிமுக, பா.ஜ.க சொத்து வரியை திரும்ப பெறக்கோரி வெளிநடப்பு-முதல்வர் வரி உயர்வுக்கு விளக்கம்..

இன்று துவங்கிய சட்டசபை மானியகோரிக்கை விவாத கூட்டத்தொடரில் அதிமுக, பா.ஜ.க சொத்து வரியை திரும்ப பெறக்கோரி கோரிக்கை விடுத்து இரு கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் இன்று துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரிலும் அதிமுக, பா.ஜ.க சொத்து வரியை திரும்ப பெறக்கோரி கோரிக்கை விடுத்தன. இதற்கு முதல்வர் ஸ்டாலின், சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது. மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என வலியுறுத்தினார்.

முதல்வரின் இந்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பா.ஜ., கட்சிகள் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பியதுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம். கொரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது பெரும் சுமையை அரசு சுமத்தியுள்ளது. உடனடியாக சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் சொத்துவரியை உயர்த்தியுள்ளனர். வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின்,
சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாத்தின்போது சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக, பாஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு விளக்கமளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை. மாநில வளர்ச்சியில் எந்த அரசியலும் செய்யாமல் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும்.ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் சொத்து வரி மாற்றப்பட்டுள்ளது. புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளை சமாளிப்பதற்கு வரி உயர்வு தேவை. 83 சதவீத மக்களை இந்த வரி உயர்வு பாதிக்காது என்பது தான் உண்மை. தற்போது உள்ள உள்ளாட்சி நிதியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதால் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.
முன்னதாக துபாய் பயணம் மேற்கொண்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன். ஐக்கிய அரபு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன். எனது துபாய் பயணம் மூலம் ரூ.6100 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 12,500 பேருக்கு வேலை கிடைக்கும். வணிக வளாகம் அமைக்க லூலு நிறுவனத்துடன் ரூ.3,500 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரூ.68,375 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில், 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 130 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Assembly Session AIADMK Press Meet Photo 18 - 2026

gallerye 123751295 3001306 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories