December 12, 2025, 9:56 AM
25.3 C
Chennai

ரஷ்யா – உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு -வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்..

ரஷ்யா – உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேசியதாவது,

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் தங்களின் படிப்பை தொடர அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, கஜகஸ்தான், போலந்து ஆகிய நாடுகளிடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். ஏனெனில் அவர்களும் உக்ரைன் மாதிரியான கல்விமுறையை கொண்டுள்ளன. அரசியல் லாபம் பெறுவதற்காக மத்திய அமைச்சர்களை அரசு அண்டை நாடுகளுக்கு அனுப்பியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். ஆனால், அமைச்சர்களின் முயற்சியால் மாணவர்களை மீட்பதற்கு உதவின.


உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அமைச்சர்கள் செல்லாமல் இருந்திருந்தால், அவர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்திருக்காது. உக்ரைனின் புச்சாவில் நடந்த படுகொலை சம்பவத்தை எம்.பி.,க்கள் பலரும் எடுத்துரைத்தனர். இந்த அறிக்கைகள் மிகவும் கவலையளிக்கிறது. அங்கு நடந்த கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது மிகவும் தீவிரமான விஷயம். சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும். ரஷ்யா – உக்ரைன் மோதலை இந்தியா எதிர்க்கிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

ரத்தம் சிந்துவதன் மூலமும், அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொடுப்பதன் மூலமும் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்று நம்புகிறோம். இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தையே சரியான பதில். அனைத்து நாடுகளின் சர்வதேச சட்டம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பிற நாடுகள் மதிக்க வேண்டும். இந்தியா அமைதியின் பக்கத்தைத்தான் தேர்ந்தெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

gallerye 165326746 3001313 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

Topics

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Entertainment News

Popular Categories