படபடக்கும் இதயத்துடன் வெற்றியை எட்டிப்பிடித்தேன்: சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரர் குகேஷ்!

gugesh - 2026

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனான குகேஷ், ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

13 நாடுகளில் இருந்து 183 வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட செஸ் போட்டியில், பங்கேற்று 7 வெற்றி, இரண்டு டிரா என மொத்தம் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். அப்பா ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். அம்மா பத்மா மைக்ரோபயாலஜிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

செஸ் மீது குகேஷிற்கு இருந்த தீராத ஆர்வம், அவரைக் கற்றுக்கொள்ள தூண்டியது. 7 வயது முதலே செஸ் விளையாட தீவிர பயிற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

குகேஷ், முதன் முறையாக 2015 ஆம் ஆண்டு ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப்பின் 9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்டு வென்றார்.

2018 ஆம் ஆண்டு உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் வெற்றி பெற்றார்.

அதன் 2018 ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில், U-12 தனிநபர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், U-12 அணி ரேபிட் மற்றும் பிளிட்ஸ் மற்றும் U-12 தனிநபர் கிளாசிக்கல் என வெவ்வேறு பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.

பிரான்சில் நடைபெற்ற 34 ஆவது ஓபன் டி கேபெல்லே லா கிராண்டே சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றார்.

குகேஷ், சேர்ஜே கார்ஜக்கினுக்குப் பிறகு உலகின் மிக இளம் வயது கிராண்ட்மாஸ்டராகக் வரக்கூடிய வாய்ப்பை ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் காரணமாக இழந்தார்.

ஜனவரி 15, 2019 அன்று தனது 12வது வயதில், தில்லியில் நடைபெற்ற நடைபெற்ற 17 ஆவது தில்லி சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் சக வீரர் டி கே சர்மாவைத் வென்று, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டியலில் பிடித்துள்ளார். உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ், 2021ம் ஆண்டு கெல்பாண்ட் சேலஞ்ச் செஸ் பட்டத்தை வென்றார்.

ஸ்பெயினில் நடைபெற்ற 48வது ரோடா செஸ் தொடரில், மொத்தம் 13 நாடுகளைச் சேர்ந்த 183 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, சத்வானி, பகத் என நான்கு பேர் பங்கேற்றனர்.

முதல் 7 சுற்று முடிவில் ஆர்மேனியாவின் மார்ட்டிரோஸ்யன் (6.5), இந்தியாவின் குகேஷ் (6.0), பிரக்ஞானந்தா (5.5) முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

இந்த போட்டியில் எட்டாவது சுற்றில் குகேஷ், ஹோண்டுராசின் நகுனை வென்றார். பிரக்ஞானந்தா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற வீரரை எதிர்கொண்டு வெற்றி கண்டார்.

இதனைத்தொடர்ந்து 9வது சுற்றில் 15 வயதான குகேஷ், இஸ்ரேலைச் சேர்ந்த 49 வயது செஸ் வீரரான விக்டரை எதிர்கொண்டார். வெள்ளை காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 29 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ஹெய்க்கை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37வது நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். ஒன்பது சுற்று முடிவில் குகேஷ், 8.0 புள்ளிகள் பெற்று தனி நபராக முதலிடமும் பிரக்ஞானந்தாலுக்கு இந்த போட்டியில் மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குகேஷ்,
“லா ரோடாவில் தங்கியிருந்ததையும் விருந்தோம்பலையும் அனுபவித்து மகிழ்ந்தேன், மேலும் முக்கியமாக இந்த ஆண்டின் எனது முதல் ஓபன் பட்டத்தை வென்றேன், குறிப்பாக தவறுகளுக்கு மிகவும் நெருக்கமாகவும், படபடக்கும் இதயத்துடனும் வெற்றியை எட்டிப்பிடித்தேன்,” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories