கொடநாடு வழக்கு தொடர்பாக இன்று சசிகலாவிடம் விசாரணை நடத்திய உயர் போலீஸ் அதிகாரிகள்..

சினிமாவை மிஞ்சிய கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று
சசிகலாவிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையால் கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்
அவரது கொடநாடு பங்களா ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவுக்குள் புகுந்த மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார். ஜெயலலிதா இருந்த வரையில் மிகவும் பாதுகாப்பாக இருந்த கொடநாடு பங்களாவில் நடந்த இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கொள்ளை சம்பவத்தின்போது காயத்துடன் உயிர் தப்பிய இன்னொரு காவலாளியான கிருஷ்ண பகதூரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கொடநாடு கொலை- கொள்ளை சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த தனிப்படையினரான சயான், வாழையாறு மனோஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் கேரள மாநிலத்தில் சயான் குடும்பத்துடன் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி விணு பிரியா மகள் நீது ஆகியோர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து கொடநாடு பங்களாவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு சினிமாவை மிஞ்சும் வகையில் பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த சயான், மனோஜ் இருவரும் டெல்லியில் வெளியிட்ட ஆடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறிய குற்றச்சாட்டுகளும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதனை மறுத்தார். இப்படி கொடநாடு வழக்கு விசாரணை பல்வேறு மர்ம முடிச்சுகளுடன் நீடித்துக்கொண்டே செல்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக், கொடநாடு பங்களா மானேஜர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இன்று காலை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டில் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். சசிகலாவிடம் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை- கொள்ளை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். ஐ.ஜி. சுதாகருடன் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ் ராவத்தும் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணை காரணமாக தி.நகரில் சசிகலா தங்கி இருக்கும் வீட்டு அருகில் பரபரப்பு நிலவியது. சசிகலாவிடம் நடத்தப்படும் விசாரணையால் கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

images 36 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories