குமரியில் படகு போக்குவரத்து இன்று ரத்து ..

Published:

உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானதால் இன்று காலை 9 மணி முதல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இன்று காலை 8 மணி முதல் வழக்கம்போல் குமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தன.

திடீரென காலை 9 மணி அளவில் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானது. இதை தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த அனைத்து சுற்றுலா பயணிகளும் படகு மூலம் அவசர அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
images 16 2 - 2026
202204221242295273 Tamil News Tamil News boat services cancelled to Vivekananda rock MEDVPF - 2026

Related articles

Recent articles

spot_img