December 6, 2025, 9:22 PM
25.6 C
Chennai

மகனின் திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்து வந்த தந்தை!

ramesh dhakat - 2025

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது மருமகளை வீட்டிற்கு அழைத்து வர ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில் உள்ள பத்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் தாகாட் என்ற விவசாயி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

ரமேஷ் தாகாட்டுக்கு ஒரே மகன் என்பதால் அவருக்காக ரமேஷ் தாகாட் எப்போதும் ஏதாவது செய்துக்கொண்டே இருப்பார். மகனின் மகிழ்ச்சியே தனக்கு முக்கியம் என்று கூறுவார்.

அவ்வளவு அன்புமிகுந்த மகனின் திருமணத்திற்கு இவர் செய்த ஏற்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது மகனின் திருமணத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, தனது மருமகளை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

ramesh - 2025

மணமகன் யஷ்வந்த் தாகத், தனது மனைவியை அழைத்துச் செல்ல ஸ்கார்பியோவில் செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில் அவரது தந்தை ஹெலிகாப்டரையே ஏற்பாடு செய்தார். இதனால் மகன் அதிர்ச்சியடைந்தார்.

பத்வான் கிராமத்தில் 25 பிகாஸ் நிலம் வைத்து மளிகை கடை நடத்தி வரும் ரமேஷ் தாகத், தனது ஒரே ஒரு மகனின் திருமண ஊர்வலத்தை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

இதுக்குறித்து அவர் பேசுகையில், பெரிய அதிகாரிகளும், அமைச்சர்களும், தலைவர்களும் ஹெலிகாப்டரில் போகும்போது, ஏன் விவசாயி மகன்
ஹெலிகாப்டரில் போக முடியாது? என்றார்.

மேலும் இவ்வளவும் என் மகன், மருமகளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார். இந்த செயல் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories