தமிழகத்தில் தற்போது வரை எக்ஸ்-இ வகை வைரஸ் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் பரவலால் பெரிய அளவில் பாதிப்பு வராது என
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் தற்போது 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதில் 17 பேர் மருத்துவமனையில் உள்ளனர். ஆக்சிஜன் பிரிவில் 7 பேரும், ஐ.சி.யு.வில் 2 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 1,420 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே உள்ளது. அதனால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
விடுதியின் மூலம் தொற்று பரவியது தெரிய வந்துள்ளது. இதனால் 13 மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வளாகத்தில் கொரோனா பரவி வருவதால் 95 சதவீதத்திற்கு மேல் ஐ.ஐ.டி.யில் உள்ளவர்கள் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள்.தமிழகத்தில் தற்போது வரை எக்ஸ்-இ வகை வைரஸ் கண்டறியப்படவில்லை. மார்ச் 2020-ல் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது தேவை இல்லை.
ஐ.ஐ.டி.யில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை அவர்களே தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவித்து இருக்கிறார்கள்.பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டு இருக்கிறோம். முதல் 3 அலையில் இருந்த பதற்றம் தற்போது தேவை இல்லை. ஏனெனில் புதிய வைரஸ் பரவலால் பெரிய அளவில் பாதிப்பு வராது. என்றாலும் முதல் 2 அலைகளில் ஏற்பட்ட தாக்கங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.






