December 6, 2025, 8:09 AM
23.8 C
Chennai

திருநெல்வேலி தாமிரவருணி தூய்மைப் பணிகள்..

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.

பொருநை நெல்லைக்குப் பெருமை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை, மீண்டும் மஞ்சள் பை இயக்கங்களை திருநெல்வேலி மாட்ட ஆட்சியர் வி. விஷ்ணு சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் தொடங்கிவைத்தார். இதையொட்டி சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி தாமிரவருணி தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அம்பாசமுத்திரம் பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, பொருநை நெல்லைக்குப் பெருமைத் திட்டத்தின் கீழ் தாமிரவருணி தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. குளிக்கும் தரத்தில் உள்ள தாமிரவருணியை குடிக்கும் தரமாக மாற்றும் நோக்கில் தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நான்கு பகுதிகளாக பணிகளை மேற்கொள்கின்றனர். தூய்மைப் பணிகளோடு அரசுத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். ஆற்றில் கழிவு நீர், மனிதக் கழிவு நேரடியாகக் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிப்ரவரி முதல் நவம்பர் வரை ஒவ்வொரு ஆண்டும் தூய்மைப்பணி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். ஆற்றங்கரைகளில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 16 ஹெக்டர் விவசாய நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரைகளில் 10 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படுத்தப்படும். சமூகம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் செந்தில்குமார், மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

IMG 20220423 WA0107 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories