திருநெல்வேலி தாமிரவருணி தூய்மைப் பணிகள்..

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.

பொருநை நெல்லைக்குப் பெருமை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை, மீண்டும் மஞ்சள் பை இயக்கங்களை திருநெல்வேலி மாட்ட ஆட்சியர் வி. விஷ்ணு சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் தொடங்கிவைத்தார். இதையொட்டி சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி தாமிரவருணி தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அம்பாசமுத்திரம் பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, பொருநை நெல்லைக்குப் பெருமைத் திட்டத்தின் கீழ் தாமிரவருணி தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. குளிக்கும் தரத்தில் உள்ள தாமிரவருணியை குடிக்கும் தரமாக மாற்றும் நோக்கில் தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நான்கு பகுதிகளாக பணிகளை மேற்கொள்கின்றனர். தூய்மைப் பணிகளோடு அரசுத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். ஆற்றில் கழிவு நீர், மனிதக் கழிவு நேரடியாகக் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

பிப்ரவரி முதல் நவம்பர் வரை ஒவ்வொரு ஆண்டும் தூய்மைப்பணி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். ஆற்றங்கரைகளில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 16 ஹெக்டர் விவசாய நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரைகளில் 10 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படுத்தப்படும். சமூகம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் செந்தில்குமார், மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

IMG 20220423 WA0107 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories