13ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு!

Inscription - 2026

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி அருகே ஆண்டாப்பட்டு கிராமத்தில், ஒரு விவசாய விளை நிலத்தில் உள்ள கற்பாறையில் கல்வெட்டு எழுத்துக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தணடராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், உயரமான கற்பாறையில் சுமார் 10 அடி நீளத்தில் இந்த கல்வெட்டு அமைந்திருந்தது. அதில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில், அவை 13ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டது தெரியவந்தது.

எனவே, அவற்றை படியெடுத்து ஆய்வுக்காக அனுப்பினர். அதனை ஆய்வு செய்த கல்வெட்டியல்துறை ஆய்வாளர் சு.ராஜாகோபால் கூறியதாவது:

ஆண்டாப்பட்டு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு, 13ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. அதில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கியது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீவல்லப பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள மெய்குன்றநாடு மற்றும் நரிப்பள்ளிநாடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை உடைய நாயனார்க்கு அதாவது, அண்ணாமலையாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தேவதானமான ஆண்டார்பட்டு நிலம் நெடுநாட்களாக புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை கோயில் பணியாளரான கண்ணாரமுதப் பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன்மல்லப்பனுக்கு பெருமாளும் மல்லப்பதென்னாயக்கரும் கோயில் தானத்தாரும் அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததைப் பற்றிய செய்திகள் இக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
Inscription1 - 2026

எனவே, இந்த கல்வெட்டில் தற்போது ஆண்டாப்பட்டு என்று அழைக்கப்படும் ஊரின் பெயர் ஆண்டார்பட்டு என்று குறிப்பிட்டிருப்பதையும் அறிய முடிகிறது.

இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலதுபுறம் சூரியன், சந்திரன் இதனுடன் திருவண்ணாமலை மலையை குறிக்கும் முக்கோண குறியீடு ஆகியவையும் வெட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற மலையைக் குறிக்கும் முக்கோண குறியீடு கொண்ட கல்வெட்டுகள் திருவண்ணாமலையைச் சுற்றி 60க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஏற்கனவே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்வெட்டு தகவல் மூலம் திருவண்ணாமலை கோயில் வழிபாட்டுக்கும், வளர்ச்சிக்கும் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நிலம் தானமாக வழங்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories