நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ந்தேதி கடைசிநாள்…

Published:

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை இந்த ஆண்டு வரும் ஜூலை 17-ந்தேதி நடத்த முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியானது முதல் பிளஸ்-2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். மே மாதம் 6-ந்தேதி இரவு வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 9 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மே 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. அன்று இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கவும் இரவு 11.50 மணிவரை விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

விண்ணப்ப விவரங்கள், தேர்வு அறை நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்.டி.ஏ. வலைதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 62 - 2026
ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img