திருத்தணி கோவிலில் ஆன்லைன் டிக்கெட்.. மீண்டும் தொடக்கம்!

thiruthani - 2026

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர்.

இங்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பக்தர்கள் வசதிக்காக மூலவருக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகம், வெள்ளித்தேர், கேடய உற்சவம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை வெளியிடப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு மூலவரை விரைவு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில், 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் வாயிலாக பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த வசதிக்கு முன், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருந்தது.

இதற்கிடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் ஆன்லைன் சேவா டிக்கெட்டுகள், அபிஷேகம், சந்தன காப்பு போன்ற டிக்கெட்டுகள் நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் பெறுவதற்கு மலைக்கோவிலுக்கு நேரில் வந்து பணம் கொடுத்து முன்பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் பக்தர்கள் நலன் கருதி இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் மற்றும் தேவஸ்தான குடில்கள் முன்பதிவு துவங்கப்படுகிறது.

இந்த நடைமுறை இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் கொண்டு வரப்படும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட், சேவா டிக்கெட், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்வதற்கு www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று சேவா டிக்கெட், அபிஷேகம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேவஸ்தான விடுதிகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தேவஸ்தான விடுதிகள் ஆன்லைன் முன்பதிவு விபரம்:

குளிர்சாதன குடில் 1,500
சாதாரண குடில் 800
சிங்கள் அறை 900

முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் சேவைகள் விபரம்:

பாலாபிஷேகம் 200, சந்தனகாப்பு 4,000
வெள்ளித்தேர் 3,500
வெள்ளி மயில் வாகனம் 3,500
கல்யாண உற்சவம் 2,000
தங்கத்தேர் 2,000
பஞ்சாமிர்த அபிஷேகம் 1,500
கேடய உற்சவம் 1,000
தங்க கவசம் 500
சகஸ்ரநாம அர்ச்சனை 400

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories