கன்னியாகுமரியில் இன்று சூறாவளிகாற்று,கடல்சீற்றம்..

Published:

கன்னியாகுமரியில் இன்று அதிகாலைமுதல் திடீர் என்று பயங்கர சூறாவளிகாற்றுவீசியது. இதனால் கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது.

இதனால் குமரி கடலில்
சுமார் 10 அடிமுதல் 15 அடிஉயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த இந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. 


இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள்கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். இந்த ராட்சத அலைகளால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரையில் போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

202205130950226806 Terrible sea rage in Kumari Tourists banned from bathing SECVPF - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img