கர்ப்பிணி சென்ற ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பக்தர்கள்!

thiruchi - 2026

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, பிரசவத்திற்காக வந்த ஆம்புலன்சிற்கு வழிவிட்ட பக்தர்களுக்கு, அதில் சென்றவர் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

மணப்பாறையில் பிரசித்திபெற்ற அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதேபோல, இந்த ஆண்டின் சித்திரைத் திருவிழா கடந்த மே 1ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இந்நிலையில், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் விழா கடந்த 15ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.

இதில், மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து கோயிலை வலம் வந்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Karthik - 2026

இதற்கிடையில், பால்குடம் எடுத்து வந்த தெருவில் வந்த ஆம்புலன்சிற்கு பக்தர்கள் தாங்களாகவே வழி ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இந்த காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் கண்ட அனைவரும் இந்தச் செயலுக்கு பாராட்டுத்தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு வந்த சீத்தப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், இந்த எதிர்பாராத நெகிழ்ச்சி சம்பவம் குறித்து கார்த்திக், கடந்த 15.05.2022 அன்று எனது மனைவிக்கு திடீரென இடுப்பு வலி எடுத்ததால், 108 ஆம்புலன்சிற்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.

பின்னர் விரைந்து வந்த ஆம்புலன்சில் மணப்பாறைக்கு அருகில் வரும்பொழுது ஆம்புலன்சிற்கு தாங்களாகவே வழி ஏற்படுத்திக் கொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல உதவியாக இருந்த பால்குடம் எடுத்த பக்தர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து தாயையும்,சேயையும் காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் செவிலியருக்கும் எனது நன்றி” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories