கர்ப்பிணி சென்ற ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பக்தர்கள்!

thiruchi - 2026

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, பிரசவத்திற்காக வந்த ஆம்புலன்சிற்கு வழிவிட்ட பக்தர்களுக்கு, அதில் சென்றவர் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

மணப்பாறையில் பிரசித்திபெற்ற அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதேபோல, இந்த ஆண்டின் சித்திரைத் திருவிழா கடந்த மே 1ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இந்நிலையில், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் விழா கடந்த 15ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.

இதில், மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து கோயிலை வலம் வந்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Karthik - 2026

இதற்கிடையில், பால்குடம் எடுத்து வந்த தெருவில் வந்த ஆம்புலன்சிற்கு பக்தர்கள் தாங்களாகவே வழி ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இந்த காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் கண்ட அனைவரும் இந்தச் செயலுக்கு பாராட்டுத்தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு வந்த சீத்தப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், இந்த எதிர்பாராத நெகிழ்ச்சி சம்பவம் குறித்து கார்த்திக், கடந்த 15.05.2022 அன்று எனது மனைவிக்கு திடீரென இடுப்பு வலி எடுத்ததால், 108 ஆம்புலன்சிற்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.

பின்னர் விரைந்து வந்த ஆம்புலன்சில் மணப்பாறைக்கு அருகில் வரும்பொழுது ஆம்புலன்சிற்கு தாங்களாகவே வழி ஏற்படுத்திக் கொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல உதவியாக இருந்த பால்குடம் எடுத்த பக்தர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து தாயையும்,சேயையும் காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் செவிலியருக்கும் எனது நன்றி” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories