கணவரை கொலை செய்து புதைத்த மனைவி-9 மாதங்களுக்கு பின் இன்று கைது..

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்த மனைவியை போலீசார் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட சடலத்தை தாசில்தார், போலீசார் முன்னிலையில் இன்று தோண்டிஎடுத்து பரிசோதனை செய்ய உள்ளனர். கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (46). இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் விஜயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் ராஜசேகர் இல்லாத போது விஜயலட்சுமியும், மோகனும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது ராஜசேகருக்கு தெரியவந்ததும், அவர் மனைவியை கண்டித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை கடந்த 9 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலன் மோகனுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டின் அருகில் இருந்த மீன் குட்டையின் ஓரத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.

குழந்தைகள் கேட்டபோது விஜயலட்சுமி, அப்பா வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் விஜயலட்சுமியின் தம்பி சிவக்குமார் மாமா எங்கே என்று கேட்டபோது கோபமடைந்த விஜயலட்சுமி உனக்கு இனி மாமா மோகன் தான்.  ராஜசேகரை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதாக கூறியிருக்கிறார். இதுபற்றி சிவக்குமார் மூலம் தகவலறிந்த ராஜசேகரின் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், தானும் மோகனும் சேர்ந்து ராஜசேகரை அடித்து கொலை செய்து புதைத்ததை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே மீன்குட்டை அருகே புதைக்கப்பட்ட ராஜசேகரின் சடலம் பண்ருட்டி தாசில்தார் முன்னிலையில் இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை 9 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். குழந்தைகள் கேட்டபோது விஜயலட்சுமி, அப்பா வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறி வந்துள்ளார்.

IMG 20220530 172956 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

Entertainment News

Popular Categories