கணவரை கொலை செய்து புதைத்த மனைவி-9 மாதங்களுக்கு பின் இன்று கைது..

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்த மனைவியை போலீசார் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட சடலத்தை தாசில்தார், போலீசார் முன்னிலையில் இன்று தோண்டிஎடுத்து பரிசோதனை செய்ய உள்ளனர். கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (46). இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் விஜயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் ராஜசேகர் இல்லாத போது விஜயலட்சுமியும், மோகனும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது ராஜசேகருக்கு தெரியவந்ததும், அவர் மனைவியை கண்டித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை கடந்த 9 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலன் மோகனுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டின் அருகில் இருந்த மீன் குட்டையின் ஓரத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

குழந்தைகள் கேட்டபோது விஜயலட்சுமி, அப்பா வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் விஜயலட்சுமியின் தம்பி சிவக்குமார் மாமா எங்கே என்று கேட்டபோது கோபமடைந்த விஜயலட்சுமி உனக்கு இனி மாமா மோகன் தான்.  ராஜசேகரை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதாக கூறியிருக்கிறார். இதுபற்றி சிவக்குமார் மூலம் தகவலறிந்த ராஜசேகரின் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், தானும் மோகனும் சேர்ந்து ராஜசேகரை அடித்து கொலை செய்து புதைத்ததை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே மீன்குட்டை அருகே புதைக்கப்பட்ட ராஜசேகரின் சடலம் பண்ருட்டி தாசில்தார் முன்னிலையில் இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜசேகரை 9 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்து கொலை செய்து வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். குழந்தைகள் கேட்டபோது விஜயலட்சுமி, அப்பா வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறி வந்துள்ளார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...
IMG 20220530 172956 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories