கருமலை ஸ்ரீ கரிகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்.

திருச்சி மணப்பாறை அடுத்த கருமலையில் மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ கரிகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் கலந்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருமலையில் மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான 96 கிராம மக்கள் வழிபடும் 700 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீ கரிகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் வைசாக பெருவிழாவில் நிகழாண்டு ஜூன் 3-ஆம் தேதி அங்குரார்ப்பணம், ரட்சாபந்தம் ஆகியவற்றுடன் தொடங்கிய 12 நாள் திருவிழாவில் நாள்தோறும் பல்லக்கில் இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவில் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக இரவு குதிரை வாகனத்தில் உற்ஸவ மூர்த்தி வேடபரி சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று 10-ஆம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 15 கிராமங்களிலிருந்து தாரைத்தப்பட்டைகளுடன் தண்ணீர் தோப்பரையில். புனித நீரை முக்கியஸ்தர்கள் ஆலயம் எடுத்து வந்தனர். பின் அங்கிருந்து தேரடிக்கு சென்று தேர் காலில் புனித நீர் ஊற்றப்பட்டது. மருங்காபுரி ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான T.ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சய நாயக்கர் தலைமையில் சிறப்பு வழிபாட்டிற்கு பின் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஊரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்று மீண்டும் தேர் நிலையடைந்தது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

IMG 20220612 WA0074 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories