தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்-தேர்தல் ஆணையம்

தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.வேட்பாளர் இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கான செலவை ஈடு செய்யும் அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ எனதேர்தல் கமிஷன் தரப்பில் வலியுருத்தப்பட்டுள்ளது.

ஒரு தேர்தலில் வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. இதையடுத்து, 1996ல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை உருவானது.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. எனவே, அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுவதோடு, மக்கள் தீர்ப்புக்கும் மரியாதை இல்லாமல் போகிறது’ என, தேர்தல் ஆணையம் சார்பில் முறையிடப்பட்டது.எனவே, ‘ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும்’ என, சட்ட திருத்தம் மேற்கொள்ள 2004ல் வலியுறுத்தப்பட்டது. இதில் தீர்வு எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷ்னர் ராஜிவ் குமார் சமீபத்தில் மத்திய சட்டத்துறை செயலரை சந்தித்தார். அப்போது, 2004ல் முன்மொழியப்பட்ட சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட கூடாது என சட்ட திருத்தம் மேற்கொள்ள முடியாவிட்டால், இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கான செலவை ஈடு செய்யும் அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் தரப்பில் கோரப்பட்டது.

gallerye 045142445 3056278 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories