தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்-தேர்தல் ஆணையம்

தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என, மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.வேட்பாளர் இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கான செலவை ஈடு செய்யும் அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ எனதேர்தல் கமிஷன் தரப்பில் வலியுருத்தப்பட்டுள்ளது.

ஒரு தேர்தலில் வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. இதையடுத்து, 1996ல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை உருவானது.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. எனவே, அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுவதோடு, மக்கள் தீர்ப்புக்கும் மரியாதை இல்லாமல் போகிறது’ என, தேர்தல் ஆணையம் சார்பில் முறையிடப்பட்டது.எனவே, ‘ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும்’ என, சட்ட திருத்தம் மேற்கொள்ள 2004ல் வலியுறுத்தப்பட்டது. இதில் தீர்வு எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷ்னர் ராஜிவ் குமார் சமீபத்தில் மத்திய சட்டத்துறை செயலரை சந்தித்தார். அப்போது, 2004ல் முன்மொழியப்பட்ட சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட கூடாது என சட்ட திருத்தம் மேற்கொள்ள முடியாவிட்டால், இரண்டு தொகுதியில் வென்று, ஒன்றில் ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கான செலவை ஈடு செய்யும் அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் தரப்பில் கோரப்பட்டது.

gallerye 045142445 3056278 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories