தமிழகத்தில் இந்தி எதிர்த்து ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம்-அண்ணாமலை..

945015 meet - 2026

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக அரசு தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:- இரட்டை வேடம் தி.மு.க. தமிழ்மொழியை வளர்க்கவில்லை, அழித்து கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன்முதலாக இந்த போராட்டத்தை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மக்களுக்கு தி.மு.க.வின் சதி திட்டத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். தி.மு.க.வின் இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டுவதற்காகதான் இந்த போராட்டம். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதுவரை இத்தனை பேர் தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. தமிழகத்தில் 2 லட்சம் என்ஜினீயரிங் சீட் உள்ளது. அதில் தமிழ்மொழியில் படிப்பதற்காக 1,377 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 50 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து உள்ளனர். தமிழ் மொழி மெல்லமெல்ல அழிந்து வருகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

அடுத்த போராட்டம் இந்தியை யாரும் திணிக்கவில்லை. இந்தி திணிப்பு என்ற வார்த்தையின் மூலமாக ஆங்கிலத்தை திணிப்பதுதான் தி.மு.க.வின் எண்ண ஓட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளிலும் 3-வது மொழி இந்திதான். இதை மறுக்க முடியுமா? மறுபடியும் இந்தி எதிர்ப்பு என்று ஆங்கிலத்தை புகுத்தினால் அடுத்த போராட்டம் மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து, அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அளவில் இருக்கும்.

தற்கொலை படை தாக்குதல் தமிழக வரலாற்றில் கோவையில் நடந்தது, முதல் தற்கொலை படை தாக்குதல். 13 பேர் திட்டம் போட்டு 75 கிலோ வெடி மருந்துகளை வாங்கி சேமித்து, அதை காரில் கொண்டு சென்றபோது. வெடித்துள்ளது. இதுதான் உண்மை. தற்கொலை படை தாக்குதலை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவது வெட்கக்கேடானது. அரசியல் களம் மாறி விட்டது. தி.மு.க.வின் மத, சாதி அரசியல் எடுபடாது. ஊக்கத்தொகை அம்பேத்கர் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் திருமாவளவன் எம்.பி.. அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரசோடு கூட்டணி வைத்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. கலங்கரை விளக்கு நம் கண்ணுக்கு தெரிகிறது. அதை நோக்கி, படகில் மாலுமிகளாக நாம் செல்ல வேண்டும். அலைகளை தாண்டி சென்றால் தான் மக்களின் நம்பிக்கை கிடைக்கும். தமிழகத்தில் அனைத்து மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மூலமாக படிக்க வழிவகை செயய வேண்டும். அதற்காக குழு அமைக்க வேண்டும். தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார். முன்னதாக பா.ஜ.க. ஆர்ப்பாட்ட மேடையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories