திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ..

kamadenu 2022 10 b97366be bf2e 495d 8f19 72a4bde6d5c8 thiruchendur subramania swamy 1599201691 - 2026

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது. இதைக் காண்பதற்காக கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையிலிருந்து வெள்ளிச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிராகாரம் வழியாக சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.கந்த சஷ்டியையொட்டி தமிழக பக்தா்கள் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தா்கள் இங்கு வந்து விரதமிருந்து வருகின்றனா். இதனால், கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இன்று சூரசம்ஹாரம்: இந்நிலையில், கந்த சஷ்டி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோயில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 30) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

உயா்கோபுரங்கள் அமைத்தும், ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது. தீயணைப்பு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் தயாா் நிலையில் உள்ளன. சூரசம்ஹாரத்தைக் காணச் செல்லும் பக்தா்களுக்கு வரிசைப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அனுமதிச் சீட்டுகள் பெற்ற வாகனங்களை மட்டுமே தாலுகா அலுவலகச் சாலையில் உள்ள காவல் நிலையம் அருகிலும், நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகிலும் நிறுத்த வேண்டும். மற்றவை ஊருக்கு வெளியே உள்ள எல்லையில் நிறுத்தப்பட வேண்டும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கா. ஆவுடையப்பன் உள்ளிட்ட காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா், கடலோரக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா. அருள்முருகன், இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ம. அன்புமணி, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories