திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ..

kamadenu 2022 10 b97366be bf2e 495d 8f19 72a4bde6d5c8 thiruchendur subramania swamy 1599201691 - 2026

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது. இதைக் காண்பதற்காக கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையிலிருந்து வெள்ளிச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிராகாரம் வழியாக சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.கந்த சஷ்டியையொட்டி தமிழக பக்தா்கள் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தா்கள் இங்கு வந்து விரதமிருந்து வருகின்றனா். இதனால், கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

இன்று சூரசம்ஹாரம்: இந்நிலையில், கந்த சஷ்டி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோயில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 30) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

உயா்கோபுரங்கள் அமைத்தும், ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது. தீயணைப்பு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் தயாா் நிலையில் உள்ளன. சூரசம்ஹாரத்தைக் காணச் செல்லும் பக்தா்களுக்கு வரிசைப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அனுமதிச் சீட்டுகள் பெற்ற வாகனங்களை மட்டுமே தாலுகா அலுவலகச் சாலையில் உள்ள காவல் நிலையம் அருகிலும், நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகிலும் நிறுத்த வேண்டும். மற்றவை ஊருக்கு வெளியே உள்ள எல்லையில் நிறுத்தப்பட வேண்டும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கா. ஆவுடையப்பன் உள்ளிட்ட காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா், கடலோரக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா. அருள்முருகன், இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ம. அன்புமணி, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories