
விடுமுறை தினத்தில் இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அறையாண்டு விடுமுறை என்பதால் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இவர்கள் வனப்பகுதிகளில் உள்ள மோயர் சதுக்கம், பைன்மரக்காடுகள், பில்லர் ராக்ஸ், குணாகுகை, பேரிஜம், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். மேலும், கொடைக்கானலில் நிலவும் மிதமான வெப்பத்துடன் கூடிய குளுமையான சூழலைஅனுபவித்தவாறு பிரையண்ட் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சுற்றுலா பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.

கொடைக்கானலில் குளிா் காலம் தற்போது தொடங்கியதையடுத்து காலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் பொதுவாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிா் காலமாகும். இதனிடையே நவம்பா் மாதம் தொடங்கிய ஒரு சில தினங்களிலேயே குளிா் அதிகமாக நிலவுகிறது. கடந்த இரண்டு நாள்களாக மேக மூட்டமும் காற்றும் நிலவியது.
இந்நிலையில், இன்று காலை முதலே மிதமான வெயில் நிலவியது. மாலையில் குளிா் தொடங்கி அதன் பின் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நகா்ப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஏற்கெனவே கொடைக்கானலில் கடந்த ஆண்டு பனியின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்திருந்தது. மேலும் மாா்ச் மாதம் வரை பனியின் தாக்கம் இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதம் கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது. மழை அதிகம் காணப்பட்டால் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். தற்போது பலத்த மழை பெய்துள்ளதால் வரும் காலங்களில் கூடுதலாக பனியின் தாக்கம் இருக்குமென எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
மேலும் இந்த சீதோஷண நிலையை அனுபவிக்க ஜொ்மன், பிரான்ஸ், நாா்வே, பிரிட்டன், இஸ்ரேல், ஸ்விட்சா்லாந்த் போன்ற வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் வருவது வழக்கம். அவா்களது நாட்டில் பனிக்காலங்களில் கடுமையான பனிப் பொழிவு நிலவும் என்பதால் அதை சமாளிக்க சாதாரண நாள்களில் நிலவும் காலநிலை போன்று கொடைக்கானலுக்கு வருவாா்கள். அவா்கள் வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மாதங்கள் தங்கி இந்த பனியின் சீதோஷண நிலையை அனுபவிப்பாா்கள்.





