December 5, 2025, 9:33 PM
26.6 C
Chennai

தேசிய ஆசிரியர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

desiya asiriyar sangam tn - 2025

தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (27.12.2022, செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கல்வித்துறையை பாதுகாக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் திரிலோகசந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, மாநில துணைத்தலைவர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் முருகன் வரவேற்புரை வழங்கினார்.

பணி நிறைவு பெற்ற பின் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்க திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிடவும், ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், தமிழக முழுவதும் கடந்த 2012ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆசிரியர்களை கல்வி சார்ந்த நிர்வாக ரீதியான பணிகளில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து, கற்றல், கற்பித்தல் பணிகளில் மட்டும் ஈடுபடுத்துவதை உறுதிசெய்ய வேண்டும், பணியில் சேர்ந்த சிறுபான்மையற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவும், அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கியது போல் ஜூலை 2022 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும் எனவும், 01.06.2009க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப மும்மொழிக் கல்வித்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி, விருப்பப்படும் மூன்றாவது மொழியை கற்கும் வாய்ப்பை தனியார் பள்ளி மாணவர்களைப் போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு குழு காப்பீடு திட்டம் வழங்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. மாநில, கோட்ட மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் இதனை வலியுறுத்தி பேசினார்கள்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆசிரியைகள், கல்வித்துறை அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாநில இணைச்செயலாளர் ராகவன் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை மாநில இணைச்செயலாளர் ராஜகோபால், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் பூங்குழலி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் யுகபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories