நாட்டின் வீரவரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் : பிரதமர் மோடி!

pm modi in punjab - 2026

”நம் நாட்டின் பெருமைமிக்க, வீரமிக்க வரலாற்றை மறைத்து, நம்மிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி நம்மை அடிமையாக்கி வைத்திருந்தனர் அந்நியர்,” எனப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் இளம் மகன்கள் ஜோராவர் சிங், பதேஹ் சிங் ஆகியோர், முஸ்லிம் மதத்துக்கு மாற மறுத்ததால் முகலாய அரசர் அவுரங்கசீப்பால் கொல்லப்பட்டனர்.

இவர்களுடைய வீர வரலாறு வெளியுலகுக்கு தெரியும் வகையில், டிச.,26ம் தேதி, ‘வீர் பால் திவஸ்’ எனப்படும் இளம் வீரர்கள் தினமாக கொண்டாடப்படும் என, ஜன., 9ல் நடந்த குரு கோவிந்த் சிங் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதன்படி, முதல் வீர் பால் திவஸ் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், 300 இளம் கலைஞர்கள் சீக்கிய பாடல்களை பாடினர். மேலும், 3000 குழந்தைகள் பங்கேற்கும் பேரணியும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களில் இருவர், போரில் உயிரிழந்தனர். மற்ற இரு மகன்கள், மதத்தை காப்பாற்றும் முயற்சியில் கொல்லப்பட்டனர். மிகவும் வலிமையாக இருந்த முகலாய அரசர் அவுரங்கசீப் வாளைக் காட்டி மிரட்டிய போதும், மதம் மாறமுடியாது என, அவர்கள் உறுதியாக நின்றனர்.

அந்த இளம் வயதிலும் ஜோராவர் சிங், பதேஹ் சிங் மிகவும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் இருந்தனர். நம் நாட்டில் இதுபோன்ற பெருமை மிக்க, வீரமிக்க பல வரலாறுகள் வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன.

சுயபச்சாதாபம், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையிலான வரலாற்றை அந்நியர் நம் மீது திணித்தனர். அந்த குறுகிய பார்வைகளில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாட்டின் வீரமிக்க வரலாற்றை மக்களுக்கு, குறிப்பாக நம் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இது அவர்களுக்கு நம் நாட்டின் பெருமையை தெரிந்து கொள்வதுடன், எதிர்கால வாழ்க்கைக்கு ஊக்கமாகவும் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories