நாட்டின் வீரவரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் : பிரதமர் மோடி!

pm modi in punjab - 2026

”நம் நாட்டின் பெருமைமிக்க, வீரமிக்க வரலாற்றை மறைத்து, நம்மிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி நம்மை அடிமையாக்கி வைத்திருந்தனர் அந்நியர்,” எனப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் இளம் மகன்கள் ஜோராவர் சிங், பதேஹ் சிங் ஆகியோர், முஸ்லிம் மதத்துக்கு மாற மறுத்ததால் முகலாய அரசர் அவுரங்கசீப்பால் கொல்லப்பட்டனர்.

இவர்களுடைய வீர வரலாறு வெளியுலகுக்கு தெரியும் வகையில், டிச.,26ம் தேதி, ‘வீர் பால் திவஸ்’ எனப்படும் இளம் வீரர்கள் தினமாக கொண்டாடப்படும் என, ஜன., 9ல் நடந்த குரு கோவிந்த் சிங் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதன்படி, முதல் வீர் பால் திவஸ் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், 300 இளம் கலைஞர்கள் சீக்கிய பாடல்களை பாடினர். மேலும், 3000 குழந்தைகள் பங்கேற்கும் பேரணியும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களில் இருவர், போரில் உயிரிழந்தனர். மற்ற இரு மகன்கள், மதத்தை காப்பாற்றும் முயற்சியில் கொல்லப்பட்டனர். மிகவும் வலிமையாக இருந்த முகலாய அரசர் அவுரங்கசீப் வாளைக் காட்டி மிரட்டிய போதும், மதம் மாறமுடியாது என, அவர்கள் உறுதியாக நின்றனர்.

அந்த இளம் வயதிலும் ஜோராவர் சிங், பதேஹ் சிங் மிகவும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் இருந்தனர். நம் நாட்டில் இதுபோன்ற பெருமை மிக்க, வீரமிக்க பல வரலாறுகள் வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன.

சுயபச்சாதாபம், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையிலான வரலாற்றை அந்நியர் நம் மீது திணித்தனர். அந்த குறுகிய பார்வைகளில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாட்டின் வீரமிக்க வரலாற்றை மக்களுக்கு, குறிப்பாக நம் இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இது அவர்களுக்கு நம் நாட்டின் பெருமையை தெரிந்து கொள்வதுடன், எதிர்கால வாழ்க்கைக்கு ஊக்கமாகவும் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories