திருமலை கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரிப்பு..

images 29 - 2026

திருப்பதி கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும். என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- திருமலையில் கடற்படை எதிர்ப்பு டிரோன் அமைப்பை (நாட்ஸ்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறிய மைக்ரோ டிரோன்களை கூட உடனடியாகக் கண்டறிந்து செயல்படவிடாமல் தடுக்கும். பக்தர்கள் டெபாசிட் செய்யும் லக்கேஜ்களை பாதுகாப்பாக சேமித்து ஒப்படைக்கும் வகையில், விமான நிலையங்கள் போன்று அதிநவீன அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆர்எப்ஐடி குறிச்சொற்கள் பயன்படுத்தப்படும்.

இதற்கான சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முறை நிகழ் ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் 396 தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் உள்ளது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவற்றில் 12 கல்யாண மண்டபங்கள் ரூ.2.8 கோடியில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 384 கல்யாண மண்டபங்களின் வாடகை உயர்த்தப்படவில்லை. டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். அது டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக சுமார் 7,126 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 960 சொத்துகள் மீது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், 2019-ஆம் ஆண்டில் ரூ.13,025 கோடியாக இருந்த தேவஸ்தான வங்கி டெபாசிட் தற்போது ரூ.15,938 கோடியாகவும், தங்கம் வைப்புத்தொகை 7,339 கிலோவிலிருந்து 10,258 கிலோவாகவும் அதிகரித்துள்ளது.

தேவஸ்தான நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். பல பள்ளிகள், கல்லூரிகள், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிகள், ஊனமுற்றோர் பாலிடெக்னிக், ஏழை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பிற சிறப்பு நிறு வனங்கள் நடத்தப்படுவதைத் தவிர, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல சமூக நலன் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும். அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் ரூ.50 கோடியில் மேம்பாட்டு பணிகள் மற்றும் திருமலையில் புதிய பரகாமணி கட்டடம் ரூ.23 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories