திருமலை கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரிப்பு..

images 29 - 2026

திருப்பதி கோவில் வங்கி டெபாசிட் தொகை ரூ.15,938 கோடியாக அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும். என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- திருமலையில் கடற்படை எதிர்ப்பு டிரோன் அமைப்பை (நாட்ஸ்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறிய மைக்ரோ டிரோன்களை கூட உடனடியாகக் கண்டறிந்து செயல்படவிடாமல் தடுக்கும். பக்தர்கள் டெபாசிட் செய்யும் லக்கேஜ்களை பாதுகாப்பாக சேமித்து ஒப்படைக்கும் வகையில், விமான நிலையங்கள் போன்று அதிநவீன அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஆர்எப்ஐடி குறிச்சொற்கள் பயன்படுத்தப்படும்.

இதற்கான சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முறை நிகழ் ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் 396 தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் உள்ளது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவற்றில் 12 கல்யாண மண்டபங்கள் ரூ.2.8 கோடியில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

மீதமுள்ள 384 கல்யாண மண்டபங்களின் வாடகை உயர்த்தப்படவில்லை. டாடா நிறுவனம் வழங்கும் ரூ.150 கோடி நன்கொடையில் திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். அது டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக சுமார் 7,126 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 960 சொத்துகள் மீது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல், 2019-ஆம் ஆண்டில் ரூ.13,025 கோடியாக இருந்த தேவஸ்தான வங்கி டெபாசிட் தற்போது ரூ.15,938 கோடியாகவும், தங்கம் வைப்புத்தொகை 7,339 கிலோவிலிருந்து 10,258 கிலோவாகவும் அதிகரித்துள்ளது.

தேவஸ்தான நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். பல பள்ளிகள், கல்லூரிகள், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளிகள், ஊனமுற்றோர் பாலிடெக்னிக், ஏழை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பிற சிறப்பு நிறு வனங்கள் நடத்தப்படுவதைத் தவிர, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல சமூக நலன் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும். அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் ரூ.50 கோடியில் மேம்பாட்டு பணிகள் மற்றும் திருமலையில் புதிய பரகாமணி கட்டடம் ரூ.23 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories