10 மாதங்களில், 3 முறை ஆவினில் விலையை ஏற்றும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்!

Annamalai
K.Annamalai

பத்து மாதங்களில், மூன்று முறைக்கு மேல் ஆவினில் பால் பொருட்களின் விலையை திறனற்ற திமுக அரசு ஏற்றி உள்ளது என பாஜக மாநில தலைவர் கண்டம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (03.02.2023) விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசு நிறுவனங்களைச் செயலிழக்க வைத்து, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் போக்கு, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே படிப்படியாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆவின் பால் பொருள்களின் விலையை, எளிய மக்கள் பாதிப்படையும்படி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது

திறனற்ற திமுக அரசு. கடந்த பத்து மாதங்களில் மட்டும், மூன்று முறை ஆவின் பால் பொருள்களின் விலையை உயர்த்தி, பொதுமக்கள் வயிற்றில் அடித்த திறனற்ற திமுக அரசு, தற்போது, புதுவிதமான விலை உயர்வைக் கொண்டு வந்திருக்கிறது. ஆவின் பச்சைநிற பால் வகையில் கொழுப்புச் சத்து அளவை 4.5% லிருந்து, 3.5% ஆகக் குறைத்திருக்கிறது தமிழக அரசு மேலும் முகவர்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்ததன் மூலம், 2 ரூபாய் அளவில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, ஆவின் பால் முகவர்கள் நலச் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு, ஆவின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியும், பின்னர் இதர பால் விலைகளை உயர்த்தியும், ஆவின் வெண்ணை விலை லிட்டருக்கு 20 ரூபாயும், நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாயும் அதிகமாக உயர்த்தி, எளிய மக்களுக்கு மேலும் பொருள் சுமையை ஏற்றிய திமுக அரசு, தற்போது மீண்டும் புதிய முறையிலான விலை உயர்வைக் கொண்டு வருவதில் முனைப்பாக இருக்கிறது. இதன் மூலம், அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை முடக்கி, தங்களுக்கு வேண்டிய தனியார் நிறுவனங்கள் பயன்பெறுமாறு வழி செய்யும் நோக்கம் இருக்கிறதா எனும் கேள்வி எழுகிறது.

ஆரஞ்சு நிற பால் வகையின் விலையை ஏற்றியதனால் பச்சை நிற பால் வகைக்கு மாறிய மக்களை வஞ்சிக்கும் வகையில் பச்சை நிற பால் வகையின் விற்பனையை முதலில் குறைத்தார்கள். தற்போது, பச்சை நிற பால் வகையில் கொழுப்பு சத்தை குறைத்து, ஆரஞ்சு நிற பால் வகையை மக்களின் மேல் கட்டாயப்படுத்தும் முயற்சியாகவே இது வெளிப்படுகிறது.

கடந்த ஆண்டு பால் விலை உயர்வுக்கு ஜிஎஸ்டிதான் காரணம் என்று. கூசாமல் பொய் சொன்னார் பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள். ஆட்சிக்கு வந்தபின் 25% விலை உயர்வை மக்கள் தலையில் சுமத்தியிருக்கும் திறனற்ற திமுக அரசு, இன்னுமொரு விலை உயர்வைத் தாங்கும் நிலையில் பொதுமக்கள் இல்லை என்பதை உணர வேண்டும்.

உடனடியாக, தற்போது கொண்டு வந்திருக்கும் மறைமுக விலை உயர்வைக் கைவிட்டு, எளிய மக்களுக்கான ஆவின் நிறுவனத்தை, அவர்கள் பயன்படும்படி நடத்த வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories