

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலா விழா இன்று பிப் 27ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. மார்ச் 7ம் தேதி பல லட்சம் பெண்கள் பொங்கலிட்டு தேவிக்கு வழிபாடு நடத்தும் பொங்கலா விழா நடக்கிறது.இரண்டு ஆண்டு கொரோனா அச்சத்தால் வீட்டில் பொங்கல் இட்ட பெண்கள் இந்த ஆண்டு கோயிலில் குதுகுலத்துடன் பொங்கல் இட உள்ளனர் .

திருவனந்தபுரத்தில் பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை திருவிழா இன்று பிப் 27ம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியியுடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து திருக்கொடியேற்றமும் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முதல் நாள் விழாவான இன்று கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தோற்றம்பாட்டு என்ற கண்ணகி தேவி வரலாறு பாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் பாடப்படும் வரலாற்று பாடலுக்கு ஏற்பஅன்றைய தினம் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொங்காலை நடைபெறும் மார்ச் 7ம் தேதி கண்ணகி தேவி பாண்டியமன்னனை வதம் செய்து வெற்றியுடன் ஆற்றுகால் தலத்துக்கு வருகை தந்து குடியிருக்கும் பாடல் பாடப்படுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான குத்தியோட்டம், தாலப்பொலி நிகழ்வுக்காக திருவிழாவின் மூன்றாம் நாள் குழந்தைகள் விரதம் தொடங்குகின்றனர்.

முன்பு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10 வயது முதல் 12 வரை உள்ள 743 சிறுவர்கள் குத்தியோட்டம் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். ஒப்பதாம் நாள் விழா அன்று மாலையில் சிறுவர்களை மிக அழகாக அலங்கரித்து தேவியின் திருநடை முன்பு அழைத்துவருவார்கள். அம்மன் வீதி உலா செல்லும் சமயத்தில் சிறுவர்களின் விலாவின் இரண்டு பகுதிகளிலும் கொக்கி போன்ற உலோகத்தை குத்திக்கொள்வார்கள்.
அம்மன் வீதியுலா முடிந்து மீண்டும் ஆலயத்துக்குள் வந்ததும் விலா பகுதியில் உள்ள உலோககொக்கிகள் அகற்றப்படும். இந்த நிகழ்வு குத்தியோட்டமாகும்.
மார்ச் 7-ம் தே தி பிரசித்திபெற்ற ஆற்றுகால் பொங்காலை விழா நடைபெறஉள்ளது. காலை சுத்த புண்யாக சடங்கை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பண்டாரஅடுப்பில் தீ மூட்டப்படுவதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்காலையிடுவார்கள்.
2020ம் ஆண்டு பொங்காலை விழாவில் 30 லட்சம் பெண் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா பெரிய அளவில் நடைபெற வில்லை. அவரவர் வீடுகளில் பக்தர்கள் பொங்கலிட்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுவதால் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்காலை யிடுவார்கள் என எதிர்பார்ப்பாக உள்ளது. . திருவிழா தொடங்கும் இன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை சினிமா நடிகர் உண்ணி முகுந்தன் தொடங்கி வைக்கிறார்.






