‘கொளுத்திருவேன்’ என கொலை மிரட்டல் விடுத்த டிஎஸ்பி.,: கண்டித்து இந்து முன்னணி நாளை ஆர்ப்பாட்டம்!

sankarankoil hm leader attacked by dsp - 2026

சங்கரன்கோவிலில் சாமி கும்பிடச் சென்ற இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் K.K.பொன்னையாவை மூத்த குடிமகன் என்று கூடப் பாராமல் மிருகத்தனமாக தள்ளி இழுத்து காயப்படுத்தி பேருந்து படிக்கட்டில் தள்ளியுள்ளார் புளியங்குடி டிஎஸ்பி அசோக். பொதுவெளியில், ஓர் அமைப்பின் மாநில பொறுப்பாளரையே “கொளுத்திருவேன்” என தைரியமாக கொலை மிரட்டல் விடுக்கும் டிஎஸ்பி., அசோக், மூடிய அறையில், காவல் நிலையத்துக்குள் சாதாரண மக்களிடம் எந்தளவு மிருகத்தனத்தைக் காட்டக் கூடும் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்!

இந்து அமைப்பின் நிர்வாகியைத் தாக்குவதில் என்ன வெறித்தனம் முகத்தில் தெரிகிறது பாருங்கள்! கன்னியமிக்க காவல்துறையில் மனநலம் பாதிக்கப்பட்டது போல செயல்படும் இந்த அசோக் என்ற அரக்கனை காவல்துறையிலிருந்து டிஸ்மிஸ் செய்யக் கோரி அறவழி அமைதிப் போராட்டம், 28.2.23 (செவ்வாய்) மாலை 4 மணிக்கு சங்கரன்கோவில் தேரடித் திடல் முன்பு இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடைபெறும். அணிதிரள்வோம் என்று, இந்து முன்னணி தென்காசி மாவட்டம் சார்பாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் வீடியோ ஒன்று வைரலானது.

சங்கரன் கோவிலில், கோமதியம்மன் கோவில் அருகே திராவிடர் கழக பொது கூட்டத்திற்கு அனுமதி அளித்த ஹிந்து முன்னணி நிர்வாகியை போலீஸ் அதிகாரி மிரட்டி கைது செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

முன்னதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டம் திட்டமிட்டபடி சங்கரன்கோவில் அருகே நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து அமைதியாக ஹிந்து முன்னணியினர் போராடினர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஹிந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பொன்னையா என்பவரை “கை நீட்டி பேசுகிறாயே நீ என்ன பெரிய ரௌடியா?” என்று புளியங்குடி துணை கண்காணிப்பாளர் அஷோக் கேட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். கை நீட்டி பேசுபவர்களை ரௌடிகள் என்று முத்திரை குத்தும் டிஎஸ்பி.,தான் முதலில் கை நீட்டிப் பேசி ரௌடிவுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் என்பது, வைரலாகி வரும் காணொளியில் தெளிவாகத் தெரிகிறது.

இந்நிலையில், சங்கரன்கோவிலில் ஹிந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு பாஜக,, மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

பள்ளி இருக்கும் இடம், மக்கள் கூடும் இடம் என்று கூறி, கடந்த வாரம் இதே தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த இயற்கை வள பாதுகாப்பு சங்கத்திற்கு போராட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறை, இறைவனை வசைபாடும் கும்பலுக்கு, மத உணர்வுகளை புண்படுத்தி, மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் கூட்டத்திற்கு கோவில் அருகிலேயே பாதுகாப்போடு அனுமதி கொடுத்தது மத விரோத செயலே.

வன்முறையை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே வன்முறையில் ஈடுபடுவது முறையல்ல. தொடர்நது காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஷோக் அவர்கள் பொது மக்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்வதாகவும், அத்து மீறி உள்நோக்கத்தோடு செயல்படுவதாகவும் சில ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூறுகிறார்கள்.

தாக்குதலுக்குள்ளான பொன்னையா அவர்கள் உள்ளிட்ட ஹிந்து முன்னணி நிர்வாகிகளிடம் கண்ணியகுறைவாக, சட்ட விரோதமாக நடந்து கொண்ட துணைக்கண்காணிப்பாளர் அஷோக் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக காவல்துறை தலைவர் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் அந்த அதிகாரியின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காது இருக்க தென்காசி மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்… என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories