
வடக்கன்ஸ் என பிரச்னையை கிளப்புகிற பிரிவினைவாதிகளிடம் தமிழர்கள் உஷாராக இருக்க வேண்டும்; இது ஒரு அந்நிய சதித் திட்டம்; ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
சமீப காலமாக வட இந்தியத் தொழிலாளர்களை மையப்படுத்தி வடக்கன்ஸ் பிரச்சனை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. பீகார், ஓரிசா, வடக்கு கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல வட இந்தியப் பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் தமிழகம் நோக்கி வருகிறார்கள். இவர்களால் தமிழர்கள் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்று அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
இந்தப் பிரச்சினைக்குப் பின் மிகப்பெரும் வெளிநாட்டுச் சதியானது உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தொழில் அடிப்படையிலான பிரிவினை வேலைகள் சமீபத்தில் நடக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பாராளுமன்றத் தேர்தல் 2024ல் வரவிருக்கின்ற இந்நிலையில் அரசியல் லாபம் அடையத் துடிக்கும் சில சுயநல அரசியல் சக்திகள் இந்த வெளிநாட்டு சதிக்கு துணை போகின்றனர்.
தமிழகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்துவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள் அதே சமயம் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக ஊடுறுவி வரும் முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கொடிப்பிடித்தவர்களும் இவர்களே.
இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து விரட்டப்பட்ட இந்திய வம்சாவளியான மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க மத்திய அரசு CAA சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த விஷம சக்திகளோ முஸ்லிம் நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்ட நாட்டிலிருந்து வெளியேறிய அதாவது ஊடுருவிய முஸ்லீம்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடினார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சங்கத் தமிழ் புலவன் பாடியது தான் நாம் தற்போது மனதில் கொள்ளவேண்டும் “யாதும் ஊரே! யாவரும் கேளீர்..” அந்த அடிப்படையில் இன்று உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்கிறார்கள் . டில்லியில் மாயாபுரி என்ற இடத்தில் அதிகம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் டில்லி அரசு பணியில் இருப்பவர்கள்.
அதுபோல் குஜராத் மோடியின் சட்டசபை தொகுதியாக இருந்த மணி நகர் தொகுதியில் அதிகம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். கர்நாடகாவில் பெங்களூருவில் பல லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் எல்லாம் கோலோச்சுபவர்கள் தமிழர்களே.
மகாராஷ்டிரா மும்பை தாராவி எனும் இடத்தில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், தலைச் சுமை தூக்குவோர், உணவு வியாபாரம் செய்பவர்கள். இப்படியாக இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதியை குறிப்பிட்டு சொல்லலாம்.
பிற இனத்தவர்கள் போலவே தமிழர்களும் ஒரிடத்தில் சேர்ந்து வாழவே செய்கிறார்கள். காரணம் இயல்பாக ஒருவருக்கு ஒருவர்உதவிகரமாக, ஒற்றுமையாக, பாதுகாப்பாக வாழ்வதை எல்லா உயிரினங்களும் கடைப்பிடிக்கும் முறைதான். இதில் மனித இனம் எப்படி வேறுபடும்?! இதையெல்லாம் சுலபமாக மறந்தவிட்டு சீமான், திருமுருகன்காந்தி, வேல்முருகன் போன்றவர்கள் சுயநல அரசியலுக்காக தேவையற்ற வகையில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்கிறார்கள்.
இதே போலத்தான் பல வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சிவசேனா எழுப்பியது. மும்பை வருபவர்களுக்கு பாஸ்போர்ட் விசா நடைமுறை படுத்த வேண்டும் என்றுகூட வாதம் வைக்கப்பட்டது. ஆனால், அவை நாளடைவில் எடுபடாத சிந்தாந்தம் என்பதால் அவர்கள் அதனை கைவிட்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரு சந்தர்பத்தில் இதே போல பேசி வந்தது. தற்போது இவர்கள் பேசும் வடக்கன்ஸ் என்பது பங்களாதேஷ் ரோஹிங்கியா முஸ்லீம்களால் ஏற்படும் ஆபத்து பற்றியது அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல லட்சம் ரோஹிங்கியா, பங்களாதேஷ் முஸ்லீம்கள் சட்டவிரோதமாக ஊடுருவி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னையிலும், திர