December 6, 2025, 2:34 PM
29 C
Chennai

ஸ்ரீவிலி ஆண்டாள் மாலை கிளி பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு அனுப்பி வைப்பு..

IMG 20230503 WA0079 - 2025
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை கிளி பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுவார். ஆண்டுதோறும் ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை கிளி வஸ்திரம் போன்ற மங்களப் பொருட்கள் புரட்டாசி மாதம் பிரமோற்சவம் கருட சேவையின் போது திருப்பதி திருமலை பெருமாளுக்கும் பங்குனி மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்க பெருமாள் அணிவதற்கும் மதுரையில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கள்ளழகர் அணிவதற்கும் கொண்டு செல்லப்படும்.

IMG 20230503 WA0082 - 2025
#image_title

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது அழகர் கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி அன்று இறங்கும் போது அணிவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த பல வண்ண மலர்மாலை கை கிளி பட்டு வஸ்திரம் ஆகிய மங்களப் பொருட்கள் மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று 3 ந் தேதி சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மலர்மாலை சாத்தப்பட்டது. கோவில் அர்ச்சகர் ராஜூ பட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.

தொடர்ந்து மங்களப் பொருட்களை மதுரைக்கு கொண்டு செல்லும் ஆண்டாள் கோவில் அர்ச்சகர் கிச்சப்பன் மேள தாளம் முழங்க ஊர்வலமாக தலையில் சுமந்து மாட வீதிகள் வழியே கொண்டுவந்து கார் மூலம் மதுரைக்கு கொண்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் கோவில் மணியம் கோபி வேதபிரான் சுதர்சன் வெங்கடேஷ் ஐயங்கார் மற்றும் ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செல்லும் மாலை கிளி ஆகிய மங்களப் பொருட்கள் மே 4 தேதி மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்லும்.

அங்கு கள்ளழகர் எதிர் சேவை முடிவின்போது அதிகாலை ஆண்டாளின் மங்களப் பொருட்கள் கள்ளழகருக்கு சாத்தப்படும். அதனை அணிந்த கள்ளழகர் தல்லாகுளத்தில் இருந்து மக்கள் வெள்ளத்தில் புறப்பட்டு பல்வேறு மண்டக படிகளுக்கு சென்று 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இறங்கி அருள் பாலிக்கிறார்.

ஆண்டாளின் மங்களப் பொருட்கள் மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories