ஸ்ரீவிலி ஆண்டாள் மாலை கிளி பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு அனுப்பி வைப்பு..

IMG 20230503 WA0079 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை கிளி பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுவார். ஆண்டுதோறும் ஆண்டாள் சூடிக்கலைந்த மாலை கிளி வஸ்திரம் போன்ற மங்களப் பொருட்கள் புரட்டாசி மாதம் பிரமோற்சவம் கருட சேவையின் போது திருப்பதி திருமலை பெருமாளுக்கும் பங்குனி மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்க பெருமாள் அணிவதற்கும் மதுரையில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கள்ளழகர் அணிவதற்கும் கொண்டு செல்லப்படும்.

IMG 20230503 WA0082 - 2026
#image_title

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது அழகர் கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி அன்று இறங்கும் போது அணிவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த பல வண்ண மலர்மாலை கை கிளி பட்டு வஸ்திரம் ஆகிய மங்களப் பொருட்கள் மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று 3 ந் தேதி சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மலர்மாலை சாத்தப்பட்டது. கோவில் அர்ச்சகர் ராஜூ பட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.

தொடர்ந்து மங்களப் பொருட்களை மதுரைக்கு கொண்டு செல்லும் ஆண்டாள் கோவில் அர்ச்சகர் கிச்சப்பன் மேள தாளம் முழங்க ஊர்வலமாக தலையில் சுமந்து மாட வீதிகள் வழியே கொண்டுவந்து கார் மூலம் மதுரைக்கு கொண்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ் கோவில் மணியம் கோபி வேதபிரான் சுதர்சன் வெங்கடேஷ் ஐயங்கார் மற்றும் ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செல்லும் மாலை கிளி ஆகிய மங்களப் பொருட்கள் மே 4 தேதி மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்லும்.

அங்கு கள்ளழகர் எதிர் சேவை முடிவின்போது அதிகாலை ஆண்டாளின் மங்களப் பொருட்கள் கள்ளழகருக்கு சாத்தப்படும். அதனை அணிந்த கள்ளழகர் தல்லாகுளத்தில் இருந்து மக்கள் வெள்ளத்தில் புறப்பட்டு பல்வேறு மண்டக படிகளுக்கு சென்று 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இறங்கி அருள் பாலிக்கிறார்.

ஆண்டாளின் மங்களப் பொருட்கள் மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories