நிறுத்தி வைக்கப்பட்ட 34 மாணவர்களின்+2 தேர்வு முடிவுகள் வெளியீடு..

images 2023 05 16T152113486 - 2026
#image_title

உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களின்
+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீலகிரியைச் சேர்ந்த 34 மணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதப் பாடத் தேர்வில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவியதாக எழுந்த புகாரில் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களின் 32 பேரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், 31 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கணித தேர்வில் ஆசிரியர்கள் உதவியதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை விசாரணைக் குழுவினர் சமர்ப்பித்த நிலையில், இன்று 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத ஆசிரியா்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து 34 மாணவா்களின்  தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே சாம்ராஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாா்ச் 27ஆம் தேதி நடைபெற்ற கணித தோ்வின்போது, பணியில் இருந்த ஆசிரியா்கள் தோ்வு எழுதிய 34 மாணவா்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில், தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உதவியது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4இல் கணித தோ்வு எழுதிய  34 மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறைக்கு அனுப்பப்பட்டதால் தோ்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிடப்படவில்லை.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய முதன்மைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், துறை அலுவலா் செந்தில், அலுவலா் சீனிவாசன், அறை கண்காணிப்பாளா்கள் ராம்கி, மூா்த்தி ஆகிய 5 ஆசிரியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். 

மேலும், 34 மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறைக்கு அனுப்பி, அங்கு அதிகாரிகள் பார்வையிட்டு, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கையை விசாரணைக் குழுவினர் தாக்கல் செய்திருப்பதால், இன்று 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories