December 6, 2025, 12:18 PM
29 C
Chennai

விருதுநகர் – நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் கல்குவாரிகளை தடை செய்திடுக..

images 23 - 2025
#image_title

விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் கல்குவாரிகளை
தடை செய்திட குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மற்றும் விதிமுறைகளை மீறி பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன, எனவே. அவற்றை மூட உத்தரவிட வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் சரமாரியாக புகார் தெரிவித்தனர்,
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

வேளாண் இணை இயக்குனர் பத்மாவதி, தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கோயில்ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு
விஜயமுருகன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான மண் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் மர்மநபர்கள் அதிகளவில் மண்ணை திருடி விற்கின்றனர். திருச்சுழி புலியூரான் கல்குவாரி, சிவகாசி பாரைப்பட்டி கல்குவாரிகளில் கண்மாய் பாதை, நீர்வரத்து பாதைகளை அடைத்து விதிகளையும் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்படுகின்றன.

அவற்றை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ,விரூயமுருகன் தெரிவித்தார்,
அதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர். மாவட்ட ஆட்சியருடன் கலந்தாnலாசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


அர்ஜூனா நதியின் குறுக்கே கன்னிசேரி பகுதியில் தடுப்பணை உள்ளது. இதில் பட்டாசு கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது என கணேசன் என்ற விவசாயி புகார் தெரிவித்தார்,
திருவில்லிபுத்துரில் உள்ள மடவார் வளாகம் பகுதியில் சந்தை அமைக்க வேண்டும் என மோகன்ராஜ் என்ற விவசாயி கோரிக்கை விடுத்தார்,
நிலம் கிடைத்தால் அங்கு அமைக்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனை குழு செயலாளர் பதிலளித்தார்,
சாத்துர் வெள்ளரிக்காய், ராஜபாளையம் பஞ்சவர்ணம் மா, விருதுநகர் கொடுக்காப்புளி, அதலக்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாம்பழ ஏலத்தை உழவர் சந்தையில் நடத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவடடத் தலைவர் ராமச்சந்திரராஜா தெரிவித்தார்,
பொதுப்பணித்துறை கண்மாய்களில் மீன்பாசி குத்தகையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என இருதுறையும் இல்லாது மீன் வளர்ப்புத்துறையினர் ஏன் உள்ளே வருகின்றனர். கண்மாய் கட்டுப்பாடு 3 ஆண்டுகள் வரை அவர்களுக்கு செல்வதால் கண்மாயை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். செண்பகத் தோப்பில் விவசாயிகளிடமும் ரூ.20 வாங்குகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என முத்தையா என்ற விவசாயி தெரிவித்தார்,
இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories