February 22, 2026, 8:28 AM
26.1 C
Chennai

புதுக்கோட்டை ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

hindumunnani - 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை கலெக்டராக வந்த மெர்ஸி ரம்யா தனது அரசு குடியிருப்பில் கடந்த 60ஆண்டுகளாக இருந்த விநாயகர் கோவிலை அப்புறப்படுத்தி உள்ளார். கலெக்டர் பதவி என்பது நிரந்தர பதவி அல்ல என்பதை அவர் உணரவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியருக்கான குடியிருப்பு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு சொந்தமானது. ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமானது.

எத்தனையோ மக்கள் பிரச்சினை இருக்கையில் கலெக்டர் மெர்ஸி தனது மத நம்பிக்கைக்கு முக்கித்துவம் கொடுத்து மற்ற மத நம்பிக்கைகளை வெறுப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தில் இவர் எப்படி நடுநிலையாக செயல்படுவார் என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு கிறித்துவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலை தான்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதே கன்னியாகுமரியில் கிறிஸ்துவ பாதிரியார் பொன்னையா, இந்த ஆட்சி கிறித்துவர்கள் போட்ட பிச்சை எனவும், திமுக ஆட்சியில் நாம் சொல்வது நடக்கும் என பேசியதை தமிழர்கள் மறந்து இருக்க மாட்டோம்.

திமுகவின் செயல்பாடு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதை ஊர்ஜிதப் படுத்துவதாக இருக்கிறது. காவல்துறை நுண்ணறிவு பிரிவு உட்பட பல முக்கிய பொறுப்புகளில் கிறித்துவர்கள் நியமிக்கப்பட்டது யதார்த்தமாக நடந்ததாக தெரியவில்லை. சமீபத்தில் மாவட்ட கலெக்டர்களில் அதிகமானவர்கள் கிறித்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மிஷனரிகளுடன் கைகோர்த்து கொண்டு மதமாற்றத்திற்கு உறு துணையாக செயல்பட்டார் என்கிற செய்தி வந்தது கவனிக்கதக்கது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மக்கள் மனதில் பெரும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணியில் பாரபட்சம் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே மக்களிடம் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்க, ஒருதலைப்பட்சமாக செயல்படும் மாவட்ட கலெக்டர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட தக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இது தொடருமானால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories