புதுக்கோட்டை ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

hindumunnani - 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை கலெக்டராக வந்த மெர்ஸி ரம்யா தனது அரசு குடியிருப்பில் கடந்த 60ஆண்டுகளாக இருந்த விநாயகர் கோவிலை அப்புறப்படுத்தி உள்ளார். கலெக்டர் பதவி என்பது நிரந்தர பதவி அல்ல என்பதை அவர் உணரவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியருக்கான குடியிருப்பு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு சொந்தமானது. ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமானது.

எத்தனையோ மக்கள் பிரச்சினை இருக்கையில் கலெக்டர் மெர்ஸி தனது மத நம்பிக்கைக்கு முக்கித்துவம் கொடுத்து மற்ற மத நம்பிக்கைகளை வெறுப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தில் இவர் எப்படி நடுநிலையாக செயல்படுவார் என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு கிறித்துவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலை தான்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதே கன்னியாகுமரியில் கிறிஸ்துவ பாதிரியார் பொன்னையா, இந்த ஆட்சி கிறித்துவர்கள் போட்ட பிச்சை எனவும், திமுக ஆட்சியில் நாம் சொல்வது நடக்கும் என பேசியதை தமிழர்கள் மறந்து இருக்க மாட்டோம்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திமுகவின் செயல்பாடு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதை ஊர்ஜிதப் படுத்துவதாக இருக்கிறது. காவல்துறை நுண்ணறிவு பிரிவு உட்பட பல முக்கிய பொறுப்புகளில் கிறித்துவர்கள் நியமிக்கப்பட்டது யதார்த்தமாக நடந்ததாக தெரியவில்லை. சமீபத்தில் மாவட்ட கலெக்டர்களில் அதிகமானவர்கள் கிறித்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மிஷனரிகளுடன் கைகோர்த்து கொண்டு மதமாற்றத்திற்கு உறு துணையாக செயல்பட்டார் என்கிற செய்தி வந்தது கவனிக்கதக்கது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மக்கள் மனதில் பெரும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணியில் பாரபட்சம் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே மக்களிடம் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்க, ஒருதலைப்பட்சமாக செயல்படும் மாவட்ட கலெக்டர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட தக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இது தொடருமானால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories