தென்காசி திருவள்ளுவர் கழக செயலர் சிவராமகிருஷ்ணன் காலமானார்!

sivaramakrishnan sankarasramam - 2026
#image_title

ஐந்தருவி சங்கராசிரமத்தின் மேனேஜிங் ட்ரஸ்டியும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலரும், தமிழ்ச் செம்மலும், சித்தவித்தை செம்மலும் ஆகிய பிரம்மஸ்ரீ .ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்கள் தமது 93 ஆம் வயதில் மகா சமாதியடைந்தார்கள். அவர்களது சமாதி நிகழ்வுகள் ஐந்தருவி சங்கராஸ்ரமத்தில் வைத்து நாளை மதியம் (09.6.023) 1 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அன்னாரின் தமிழ் சேவையும் ஆன்மீகச் சேவையும் மிகவும் உன்னதமானதும் உயர்ந்ததும் ஆகும். தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலராக சுமார் 60 ஆண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். ஐந்தருவி சங்கராசிரமத்தின் தலைவராகவும் மேனேஜிங் டிரஸ்டியாகவும் சுமார் 50 ஆண்டுகாலம் அர்ப்பணிப்போடு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சங்கரானந்தர் குரு நிழலில் அவரது ஆன்மா இளைப்பாற பிராத்திக்கிறோம்… என்று ஆஸ்ரமத்தின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

தென்காசியில் 1927ல் தொடங்கப்பட்டு, தற்போது 96 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறது திருவள்ளுவர் கழகம். இதன் செயலாளராக இருந்தவர் சிவராமகிருஷ்ணன் . 93 வயதான இவர் தனது 13 வயதிலேயே இந்தக் கழகத்திற்காக உழைக்கத் தொடங்கினார். கடந்த 63 ஆண்டுகளாக தொடர்ந்து செயலாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.

திருவாசகம் முற்றோதுதல் நடப்பது போல திருக்குறள் முற்றோதுதல் என்ற முறையை அறிமுகப்படுத்தியவரும் இந்த கழகத்தில் உள்ள நூலகத்தை தொடங்கியவரும் சிவராமகிருஷ்ணன் தான்.

தற்போது தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் 97வது திருக்குறள் விழா ஏற்பாட்டுகளைக்கூட முழு முனைப்புடன் செய்து வந்தார். 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் சிவராமகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories