அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி-சீமான்..

Published:

IMG 20230622 WA0041 - 2026

தம்பி அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி;இரண்டு கட்சிக்கு ஒரே திருடன் செந்தில் பாலாஜி என விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முன் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்

தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

எங்களுடைய கருத்து அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்பதுதான் நான் விசாரித்த வரையில் சரியாக வியாபாரம் ஆகாத கடைகளை மூடுவதாக கூறுகிறார்கள் என பேசினார்

எங்களுடைய கருத்துக்கும் சீமான் கருத்துக்கும் ஒத்துப் போகிறது ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என இருவரும் கூறுகிறோம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

தமிழகத்தில் இதுவரை பாஜக ஆட்சி அமையவில்லை ஆனால் மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது அங்கு ஊழல் இல்லை என கூற முடியாது தம்பி அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி ஆனால் அவர் இருக்கும் கட்சி ஊழல் அற்ற கட்சியா நேர்மையான கட்சியா என்றால் அது கிடையாது அதிகாரத்துக்கு வந்த பிறகு நேர்மையாக இருப்பது தான் சாதனை என பேசினார்

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

விஜய் அரசியலுக்கு வந்தால் ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் பாதிப்பு இருக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு

ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் பணம் கொடுக்காமல் வாக்கு வாங்க முடியாது திமுகவுக்கு வாக்களிப்பவர்களின் மனநிலையும் அதிமுகவிற்கு வாக்களிப்பவர்களின் மனநிலையும் மாற்ற முடியாது புதிதாக வாக்களிப்பவர்கள் அவருக்கு வாய்ப்பு தரலாம் என நினைக்கலாம் இருந்த இரண்டு கட்சியும் பிடிக்காதவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தரலாம் யாரும் யாரையும் பாதிக்க முடியாது என பேசினார்

செந்தில் பாலாஜி மீதான விசாரணையும் அதேபோல் பொன்முடி மீதான விசாரணைக்கு தடை கூற முடியாது என உயர்நீதிமன்றம் கூறியிருந்தது குறித்தும் இதில் பாஜகவின் செயல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

இது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும் காலம் கடந்த செயல் ஒரு அரசியல் நெருக்கடி ஒரு பழிவாங்கும் செயலாக தான் பார்க்க முடிகிறது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க இவ்வளவு காலம் எங்கே சென்றார்கள் கேட்டால் நீதிமன்றம் இப்போதுதான் உத்தரவிட்டது எனக் கூறுகிறார்கள் நீதிமன்றத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன் தேவையானபோது நடவடிக்கை என்றால் அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான் என பேசினார்

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

திருப்பூர் மாநகராட்சியில் ஒரு விளக்குமாறு ரூ 440 வாங்கப்பட்டுள்ளது முறைகேடு என புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

மிகவும் மதிப்புமிக்க விளக்குமாறாக இருக்கும் போல ஏதாவது ஒரு கணக்கு எழுதி பணத்தை திருடும் வேலைதான் இது செங்கிப்பட்டியில் பாலம் இடிந்து விடக்கூடாது என்பதற்காக டேப்பை வைத்து ஒட்டி வைத்திருக்கிறார்கள் என பேசினார்

திருமாவளவன் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு என பேசியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

நான் கூறிய கருத்தை தான் அவர் திரும்ப கூறியிருக்கிறார் உண்மையான நேர்மையான அரசியல்வாதி நல்லகண்ணு ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட ஆக முடியவில்லை திரை புகழ் வெளிச்சம் மட்டுமே நாட்டை ஆள தகுதியை தந்து விடுகிறது என்பதை ஏற்க முடியாது நானே படேகர், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் சரிபாதியை மக்களுக்கு கொடுத்து விடுகிறார்கள் அது மிகையாகத் தெரியாது எம்ஜிஆரும் அதே போல தான் படிப்படியாக தான் உயர்ந்து வந்தார் என பேசினார்

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் விஷயத்தில் முதலமைச்சர் அமைச்சரைக் காக்கா நடவடிக்கை மேற்கொள்கிறாரா இல்லை அவரை ஏதேனும் வாய் விட்டால் மாட்டிக் கொள்வோம் என அவர் செயல்பாடு உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு

மொத்தமாகவே இது அனைவரையும் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாக தான் உள்ளது செந்தில் பாலாஜி தான் அனைத்து கட்சி காரர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் எனக் கூறுகிறார்கள் அவரது கட்டுப்பாட்டில் 60 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறுகிறார்கள் இந்த குற்றச்சாட்டு அதிமுக ஆட்சியில் நடந்தது வேறு வழி இல்லை இரண்டு கட்சிக்கும் ஒரே திருடனாக செந்தில் பாலாஜி இருந்து விட்டார் என பேசினார்

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img