December 6, 2025, 3:40 AM
24.9 C
Chennai

2000 தனியார் மதுக்கடை திறக்க, 500 அரசு மதுக்கடை மூட… எல்லாம் நாடகம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

Dr Krishnasamy pudiyathamizagam

தனியார் மதுக் கூடங்களுக்கு லைசன்ஸ் வழங்கிவிட்டு அந்த தனியார் கடைகளுக்கு பாதிப்பு வரக்கூடிய 500 அரசு மது கடைகளை மட்டும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.! என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் – டாக்டர் கிருஷ்ணசாமி @DrKrishnasamy கூறியுள்ளார்.

2000 தனியார் கடைகளுக்கு அனுமதி கொடுத்து விட்டு, அந்தக் கடைகளால் பாதிப்பு வரக்கூடிய 500 அரசின் கடைகளை மூடுகிறார்கள். மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் கடைகள் மூலம் லாபம் செழிக்க வைத்து, அவற்றால் பாதிப்பு வரக்கூடிய அரசின் டாஸ்மாக் கடைகள் மற்றும் லாபம் இல்லாத அரசின் கடைகளை மூடுகிறார்கள் என்று செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழகம் முழுதும் இன்று முதல் முதல்வரின் உத்தரவுப்படி 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன. கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து, அவற்றை ஜூன் 22ஆம் தேதி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. மண்டல மேலாளர்கள் பரிந்துரைப்படி குறைந்த வருவாய், குறைந்த இடைவெளி, வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில், நீதிமன்ற உத்தரவு, நீண்ட நாளாக பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் என 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கடைகள் அனைத்தும் ஜூன் 22ம் தேதி இன்று முதல் மூடப்படுகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை புதிய தமிழகம் கட்சி விமர்சனம் செய்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கை உள்நோக்கம் வாய்ந்தது என்று கூறினார் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் விமர்சனம் செய்துள்ள டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, “இரண்டாயிரம் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் 43,000 கோடியாக இருந்த மது விற்பனை லாபம் அடுத்த ஆண்டு 52,000 கோடியாக உயரும் என அறிவித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடுறிது திமுக!” என விமர்சித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories