சிவகாசி: பள்ளி மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு பாதபூஜை!

sivakasi school childs doing pathapooja to their parents - 2026

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கேற்ப, முன்னதாக பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

இதனையடுத்து தாங்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோர் மற்றும் முதியோர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் கால்களில் நீர் ஊற்றி கழுவி, சந்தனம் குங்குமம் பூசி, பூக்களை தூவி பாதபூஜைகள் செய்தனர். பாதபூஜை செய்த மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் பூக்கள் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளி முதல்வர் கூறும்போது, பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்களது நிலை உயர்வதற்கு காரணமாக இருக்கும் பெற்றார்களுக்கும், முதியவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டும்.

தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை எப்போதும் மறக்கக்கூடாது. முன்னோர்கள், மூத்தோர்கள், உடன் இருக்கும் சக மனிதர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும்.

கல்வியில் சிறந்ததும், முதன்மையானதாகவும் இருப்பது ஒழுக்கம் என்பதை எங்களது பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம் என்று கூறினார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories