திமுக., பைல்ஸ்-2 வீடியோ வெளியிட்ட அண்ணாமலை; ஆளுநரிடம் அளித்த ஆவணங்கள்!

annamalai met governor ravi - 2026

‘திமுக பைல்ஸ்’ 2ம் வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை ஆளுநரை சந்தித்து ஆவணங்களையும் அளித்தார்.

ஆளுநர் ரவீந்திர நாராயண ரவியை சந்தித்த தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, திமுக.,வினரின் சொத்துப் பட்டியல் அடங்கிய ஆவணங்களை அவரிடம் நேரடியாக ஒப்படைத்தார். பின்னர் ‘திமுக பைல்ஸ்’ 2ம் பகுதி வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார்.

DMK_Files_Part2 – திமுக.,வினரின் இரண்டாவது சொத்துப்பட்டியலை தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை ஜூலை 26 புதன் கிழமை இன்று வெளியிடவுள்ளதாகக் கூறியிருந்தார். அதன்படி, இன்று மாலை 3.30 மணி அளவில் அவர் கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கே ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவியைச் சந்தித்தார். அப்போது திமுக.,வினரின் சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை அளித்தார். அவர் முன்னே ஒரு பெரிய டிரங்கு பெட்டி வைக்கப் பட்டது. இது குறித்த புகைப்படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இரும்புப் பெட்டி முழுவது ஆவணங்கள் அடங்கியிருப்பதாகக் கூறப்பட்டது.

இதன் பின்னர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுநரிடம், திமுக., அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள், எம்பி.,க்கள் மற்றும் திமுக., முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக பைல்ஸ் பகுதி-2 ஆவணங்களையும், ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், தனது முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தவறி, தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளைக் கண்டும் காணாமல் மௌனப் பார்வையாளராக இருப்பதால், டாஸ்மாக் இல்லாத தமிழகம் அமைப்பது குறித்த வெள்ளை அறிக்கையை இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களிடம் சமர்ப்பித்துள்ளோம்… என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஆளுநரிடம் அளித்த வெள்ளை அறிக்கை இங்கே...

பின்னர், ‘திமுக பைல்ஸ்’ பகுதி-2ன் வீடியோவை அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோ:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories