மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும்!

kadeswara subramaniam hindu munnani - 2026

மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும்… என்று, இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது சித்திரை திருவிழாவாகும். இந்தத் திருவிழா மீனாட்சி அம்மன் கோவில் முதல் அழகர் மலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் கோவில் வரை 22 நாட்கள் நடக்கும் சிறப்பான பாரம்பரியமான திருவிழாவாகும்.

இந்த திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் சரியான முறையில் அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தினால், மதுரை உயர்நீதிமன்றம் சித்திரைத் திருவிழாவிற்கான பாதுகாப்பையும் அடிப்படை வசதிகளையும் உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகை துவங்குவதற்கு முன்பாகவே இஸ்லாமியர்களுக்கு என்னென்ன தேவை என்றும் கஞ்சி காய்ச்சுவதற்கு எவ்வளவு அரிசி தேவைப்படுகிறது என்றும் முன்கூட்டியே திட்டமிட்ட தமிழக அரசு, வேளாங்கண்ணி கிறிஸ்துவ திருவிழாவிற்கு அந்த மதத்தின் மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்று முன்கூட்டியே திட்டமிட்ட அரசு கடந்த இரண்டு வருடங்களாக சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த திட்டமிடாத காரணம் என்ன? என்று தெரியவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு திருவிழாவின் போது போதிய கட்டமைப்பு வசதிகளை அரசும் காவல்துறையும் செய்ய தவறியதால் கோரிப்பாளையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 2023 ஆம் ஆண்டு வைகை ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தொன்று தொட்டு பாரம்பரியமாக பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் திருவிழாவில் இந்த அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் எப்படி ஒரு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால் பக்தர்களின் உயிரிழப்புகளும் திருட்டு சம்பவங்களும் நடப்பது இந்த அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. மேலும் பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பறை வசதி கூட்ட நெரிசலுக்கு தகுந்த பாதுகாப்பு வசதி ஆகியவற்றை செய்து அரசு மறுக்கிறதா? மறக்கிறதா? என தெரியவில்லை..

இதில் வேடிக்கை என்னவென்றால் உயிர் இழப்பு நடந்த பின்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்டால் இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லையென பொறுப்பில்லாமல் பதில் கூறுவது இந்து சமய அறநிலையத்துறையின் அவல நிலையை காட்டுகிறது. 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தும் இது போன்று நடப்பது மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது .

இந்த அரசினாலோ இந்து சமய அறநிலைத்துறையினாலோ திருவிழாவை சிறப்பாக நடத்த முடியவில்லை என்றால் அதற்கான திட்டமிட முடியவில்லை என்றால் ஆன்மீக அமைப்புகளிடம் விட்டு விடலாமே.! ஏன் இந்து முன்னணியிடம் திருவிழாவை சவாலாக ஒப்படைத்து பாருங்கள். எப்படி நடத்த வேண்டுமென வெகுவிமர்சையாக நடத்தி அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் பாடம் எடுத்து காட்டுகிறோம்..

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

விழாவிற்கான முன்னேற்பாடுகளில் அரசு அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினால் திருவிழா சிறப்பாக நடைபெற வாய்ப்பு இல்லை. மாறாக மதுரை பகுதியைச் சார்ந்த உள்ளூர் பிரமுகர்கள், ஆன்மீக பெரியோர்கள், மடாதிபதிகள், இந்து இயக்கங்கள் ஆகியோரின் ஆலோசனைகளை கேட்கும் பட்சத்தில் மதுரையில் எந்தெந்த பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும், எந்தெந்த பகுதியில் வெளியூரில் இருந்து திருடர்கள் பக்தர்களின் நகைகளை பறித்து செல்கின்றனர், இதற்கு முன்பாக என்னென்ன அசம்பாவிதங்கள் நடந்தது என்பதை விளக்கி கூற முடியும்.

மதுரை மாவட்டத்திற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக வந்த அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக தெரிய வாய்ப்பு இல்லை. குறிப்பாக தல்லாகுளம் வைகை ஆற்றுப்பகுதி கோரிப்பாளையம் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் இந்தப் பகுதியில் பக்தர்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு திருவிழா சம்பந்தமாக முன்பே திட்டமிட்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

இந்த முறை பக்தர்களின் பாதுகாப்பிலோ, அவர்களின் உடைமையின் பாதுகாப்பிலோ, அடிப்படை வசதிகளிலோ தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் சரியாக கையாளா விட்டால் இந்து முன்னணி பார்த்துக்கொண்டு இருக்காது.

எனவே உடனடியாக உள்ளூர் பிரமுகர்களையும் அரசு அதிகாரிகளையும் அழைத்து சரியான திட்டமிடல் மூலம் நீதிமன்ற உத்தரவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பக்தர்களின் பாதுகாப்பு விஷயத்திலும் அடிப்படை வசதி விசயத்திலும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தர இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories