December 5, 2025, 5:20 PM
27.9 C
Chennai

வருவாய்க்கு ஒண்ணும் குறைச்சலில்ல! ஆனாலும் இங்கே மதுரை கோட்ட அதிகாரிகளின் புறக்கணிப்பு ஏன்?

railway news - 2025
#image_title

ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

அதிக வருவாய் ஈட்டும் மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் வழித்தடமான கொல்லம் திருநெல்வேலி,கொல்லம் செங்கோட்டை மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கொல்லத் தில் இருந்து இயங்கிய கொல்லம்-திருநெல்வேலி, கொல்லம் -கோவை, கொல்லம் -சென்னை மெயில் செங்கோட்டை ராமேஸ்வரம் ரயில்களை மீண்டும் இயக்க மதுரை கோட்ட ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற 2023-2024 நிதியாண்டிற்காண ரயில்வே வருவாய் தரவினை இந்திய ரயில்வேயானது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள கோட்டவாரியான வருவாய் விவரத்தில் மதுரை கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

மதுரை கோட்டத்தில் மதுரை ரயில் நிலையம் முதலிடத்தையும், திருநெல்வேலி ரயில்நிலையம் இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் ரயில்நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

விருதுநகர் ரெயில்நிலையத்தினை பொறுத்த வரை ₹25,17,78,990 வருமானம் ஈட்டி ஆறாம் இடத்தில் உள்ளது.

மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்திலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென்காசி ரெயில் நிலையம் ரூ.21.60 கோடி வருமானத்துடன் 9-வது இடத்தில் உள்ளது.

இதில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ், ஈரோடு எக்ஸ்பிரஸ், நெல்லை-செங்கோட்டை 4 ஜோடி பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் ஆகியவற்றால் தென்காசி ரெயில் நிலையத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட நெல்லை-தென்காசி வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை செங்கோட்டையில் சென்னைக்கு பகல் நேர தினசரி ரெயில் இல்லை.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்க அறிவிக்கப்பட்டு ரயில்வே கால அட்டவணையில் இடம்பெற்ற செங்கோட்டை தாம்பரம் செங்கோட்டை தினசரி பகல் நேர ரயில் சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

கொல்லம் திருநெல்வேலி,கொல்லம் செங்கோட்டை மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கொல்லத் தில் இருந்து இயங்கிய கொல்லம்-திருநெல்வேலி, கொல்லம் -கோவை, கொல்லம் -சென்னை மெயில்ரயில்கள் தற்போது அகல ரயில் பாதையாக போடப்பட்டபின் மீண்டும் இயங்கவில்லை.

மேலும் தென்காசி மக்களவைத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெங்களூரு கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு ரெயில் வசதி கிடையாது.

எனினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்தின் வருமானத்தில் முதல் 50 இடத்திற்குள் வந்துள்ள நிலையில் இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.

தற்போது செங்கோட்டை-தாம்பரம், செங்கோட்டை சென்னை சிலம்பு அதிவிரைவு ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களை தினமும் இயக்க வேண்டும்.

மேலும் மும்பை, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு தென்காசி ராஜபாளையம் வழியாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பெங்களூரு சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரம் செல்வதற்கு திருவனந்தபுரம்-புனலூர் கன்னியாகுமரி புனலூர் ரயில்கள் செங்கோட்டை திருநெல்வேலி வரை நேரடி ரெயில் சேவையாக இயக்க வேண்டும் – என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories