செங்கோட்டை பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா!

DSC 0200 - 2026

செங்கோட்டை பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்

செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்

இந்தாண்டு கிருஷ்ணஜெயந்தி விழாவில் ஆக-25ஆம் தேதி மாலை 6மணிக்கு இளைஞர்களுக்கான வழுக்குமரம் ஏறும் போட்டி நடந்தது. போட்டியில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனா். பின்னா் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திங்கட்கிழமை மாலை 3மணிக்கு சமுதாய நிர்வாகிகள் பெரியோர்கள் கலந்து கொண்டு சமுதாய கொடியேற்று நிகழ்ச்சியும் அதனைதொடா்ந்து சிறுவர்-சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாலை 5மணிக்கு சிவகாசி-நாராணபுரம் ஸ்ரீ-சக்கரத்தாழ்வார் கோவில் கோலாட்ட குழுவினா் பஜனையுடன் பகவான் ஸ்ரீகிருஷ்ணா் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி செண்டை மேளம் வாணவேடிக்கையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது.

இரவு 9மணிக்கு மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை விழா கமிட்டியார், சமுதாய நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினா்கள், செயற்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலா் சிறப்பாக செய்திருந்தனா்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்
DSC 0156 - 2026

செங்கோட்டை மேலுார் பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா

சிறுவா்-சிறுமியா் ராதை,கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலம்.
செங்கோட்டை மேலுார் சேனைத்தலைவா் சமுதாயம் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்

இந்தாண்டு விழாவில் அருள்மிகு சேனைகுலவிநாயகா் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னா் கோவில் முன்பிலிருந்து கிருஷ்ணர்-ராதை வேடமணிந்த சிறுவர்-சிறுமியா்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிந்தா கோஷத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் நிறைவு பெற்றது.

அதனை தொடா்ந்து கிருஷ்ணா்-ராதை வேடமணிந்த சிறுவா், சிறுமியா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சமுதாய நாட்டாமை கணபதி தலைமைதாங்கினார் செயலாளார் பிச்சுமணி(எ)சாமி, நகர்மன்ற உறுப்பினா் இந்துமதிசக்திவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனா். பொருளாளா் சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடர்ந்து தமிழாசிரியா் பிச்சம்மாள்இசக்கிமுத்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பின்னா் சிறுவர்-சிறுமியா்களுக்கு சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினா். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினா்கள் குருசாமி(எ)செல்வம், இரணியவேல், ஐயப்பன், ஆதிமூலம், சி.ஆதிமூலம் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!
IMG 20240826 210421 - 2026

செங்கோட்டை வடக்கத்தி அம்மன் கோவில் தெருவில் கிருஷ்ண ஜயந்தி விழா

செங்கோட்டை கோனார் தெருவில் யாதவா் சமுதாயம் சார்பில் வடக்கத்தி அம்மன் கோவில் முன்பு வைத்து ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் இந்தாண்டு விழாவில் வடக்கத்தி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவிற்கு சமுதாய நாட்டாமை தலைமைதாங்கினார். செயலாளா், பொருளாளா் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலைவகித்தனா். .

அதனைதொடா்ந்து சிறுவா்-சிறுமியா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னா் சிறுவர்-சிறுமியாகள் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிந்தா கோஷத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியா், சமுதாய பெரியோர், நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலா் சிறப்பாக செய்திருந்தனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories