திருச்செந்தூர் கும்பாபிஷேகம் நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

Published:

railway news - 2026
#image_title

சென்னை – செங்கோட்டை இடையே நெல்லை, தென்காசி வழியாக திருச்செந்தூர் கும்பாபிஷேகம் விழாவையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 06.07.25 ஞாயிற்றுக்கிழமை அன்று வண்டி எண் 06089 சென்னை எழும்பூர் – செங்கோட்டை இரவு 09.55 க்கு எழும்பூரில் புறப்பட்டு திங்கள் கிழமை காலை 11 30 க்கு செங்கோட்டையை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 07.07.25 திங்கள் கிழமை அன்று வண்டி எண் 06090 செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் செங்கோட்டையில் இரவு 07.45 க்கு புறப்பட்டு செவ்வாய் கிழமை காலை 09.05 க்கு செங்கோட்டையை சென்றடையும்.

தற்போது நடைமேடை நீளம் பற்றாக்குறை காரணமாக பாவூர்சத்திரம் கடையம் அம்பை கல்லிடை சேரன்மகாதேவியில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லாது.

நெல்லை – தென்காசி ரயில் வழித்தட பயணிகள் நெல்லையில் இறங்கி அதன் பின்னால் 9. 45 மணிக்கு நெல்லையில் புறப்படும் நெல்லை செங்கோட்டை பயணிகள் ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img