22வது ஆண்டில் பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்..

FB IMG 1751899540884 - 2026

செங்கோட்டை சென்னை செங்கோட்டை பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் இந்த ரயில் சாதாரண பயணிகள் பெட்டிகளை அதிகரித்து குறைந்த கட்டண மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இணைத்து பயண நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரயில் பயணம் என்றால் சுகமானது.அதிலும் இந்த பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணிப்பது தென்காசி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிக மிக இயல்பானது.ராத்திரி பயணத்தை துவக்கினால் விடிவதற்கு முன் சென்னை சென்று விடலாம்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் தென்காசி சென்னை இடையே வாரம் ஒருநாள் இயங்கி பின்னர் செங்கோட்டை சென்னை இடையே வாரம் 5 நாள் இயங்கி தற்போது தினசரி ரயிலாக பயணிகளின் ஏகாபித்த ஆதரவுடன் மதுரை கூட்டத்தில் அதிக வருவாயீட்டும் ரயிலாக பொதிகை அதிவிரைவு ரயில் இயங்கி வருகிறது.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதையடுத்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பாக இந்த ரயிலுக்கான கொண்டாட்டம் 20/09/25 மாலை செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி, இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம், பொருளாளர் மற்றும் மதுரை ரயில் கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சுந்தரம் , PRO ராமன் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா , செங்கோட்டை அக்ரி ஷேக் , மேலூர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் முரளி இவ்விழாவிற்கான ஜாங்ரி மற்றும் இரண்டு கிலோ எடை உள்ள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பல ஆயிரம் பயணிகள் பயணிக்கும் இந்த ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் ஒரு மணி நேரம் பயண நேரத்தை குறைக்க வேண்டும்.கூடுதலாக சாதாரண பயணிகள் பெட்டி குறைந்த கட்டணத்தில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories