‘திராவிட’ இல்லாத கட்சிப் பெயர்; கொடி! அம்மா மமுக ஆட்சியைப் பிடிக்கும் என தினகரன் சூளுரை!

டிடிவி தினகரன் துவங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி அறிமுகம்!
டிடிவி தினகரன் துவங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி அறிமுகம்!

மதுரை: கருப்பு, வெள்ளை, சிகப்பு நிறத்தில் நடுவில் ‘ஜெ’ படம் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் டி.டி.வி.

மேலூரில் நடைபெறும் டிடிவி தினகரனின் கட்சிக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.

22 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.  ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய பெயரை அறிவித்தார் தினகரன். இந்தப் புதிய  புதிய கட்சியின் பெயர் ” அமமுக- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திராவிடம் என்ற சொல் இல்லை.

dinakaran partyflag - 2026

மதுரை மேலூரில் நடைபெற்று வரும் அவரது அணியினர் கலந்துகொண்டுள்ள புதிய கட்சி தொடக்க விழாவில், புதிய கட்சியின் பெயரை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக, தான் தொடங்குவது புதிய கட்சி இல்லை, புதிய அணி என்று கூறிவந்தார். தாம் இன்னும் அதிமுக.,வில் தான் இருக்கிறேன் என்பதைக் கூறும் வகையிலும், தமது ஒரே இலக்கு அதிமுக., தான் என்றும் தெரிவிப்பதற்காக அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்நிலையில், கட்சியின் பெயராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்துள்ளார். இது ஆங்கிலத்தில் ஏ.எம்.எம்.கே., அ.ம.மு.க., எனும் வகையில் வருகிறது. அதிமுக., வில் உள்ள ’தி’ எழுத்துக்குப் பதிலாக, ’ம’ வருகிறது.

dinakaran party people - 2026

மேலூர் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் இடத்தில்  60-க்கு 40 வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்ட மேடையில் டிடிவி தினகரன் உள்பட அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்.

இன்று காலை 9.30 மணி அளவில் மேடைக்கு வந்த டிடிவி தினகரன் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து மேடையில் தொண்டர்களிடையே தனது கட்சியின் பெயரை சரியாக 10.30 மணிக்கு டிடிவி தினகரன் அறிவித்தார்.

dinakaran partyq - 2026

அதைத் தொடர்ந்து பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என்று சூளுரைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories