‘திராவிட’ இல்லாத கட்சிப் பெயர்; கொடி! அம்மா மமுக ஆட்சியைப் பிடிக்கும் என தினகரன் சூளுரை!

டிடிவி தினகரன் துவங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி அறிமுகம்!
டிடிவி தினகரன் துவங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடி அறிமுகம்!

மதுரை: கருப்பு, வெள்ளை, சிகப்பு நிறத்தில் நடுவில் ‘ஜெ’ படம் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் டி.டி.வி.

மேலூரில் நடைபெறும் டிடிவி தினகரனின் கட்சிக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.

22 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.  ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய பெயரை அறிவித்தார் தினகரன். இந்தப் புதிய  புதிய கட்சியின் பெயர் ” அமமுக- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திராவிடம் என்ற சொல் இல்லை.

dinakaran partyflag - 2026

மதுரை மேலூரில் நடைபெற்று வரும் அவரது அணியினர் கலந்துகொண்டுள்ள புதிய கட்சி தொடக்க விழாவில், புதிய கட்சியின் பெயரை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக, தான் தொடங்குவது புதிய கட்சி இல்லை, புதிய அணி என்று கூறிவந்தார். தாம் இன்னும் அதிமுக.,வில் தான் இருக்கிறேன் என்பதைக் கூறும் வகையிலும், தமது ஒரே இலக்கு அதிமுக., தான் என்றும் தெரிவிப்பதற்காக அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்நிலையில், கட்சியின் பெயராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்துள்ளார். இது ஆங்கிலத்தில் ஏ.எம்.எம்.கே., அ.ம.மு.க., எனும் வகையில் வருகிறது. அதிமுக., வில் உள்ள ’தி’ எழுத்துக்குப் பதிலாக, ’ம’ வருகிறது.

dinakaran party people - 2026

மேலூர் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் இடத்தில்  60-க்கு 40 வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்ட மேடையில் டிடிவி தினகரன் உள்பட அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்.

இன்று காலை 9.30 மணி அளவில் மேடைக்கு வந்த டிடிவி தினகரன் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து மேடையில் தொண்டர்களிடையே தனது கட்சியின் பெயரை சரியாக 10.30 மணிக்கு டிடிவி தினகரன் அறிவித்தார்.

dinakaran partyq - 2026

அதைத் தொடர்ந்து பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என்று சூளுரைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories