
தில்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார். அப்போது பேசியவர், பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
தில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் அண்மைக் காலமாக தவறாமல் பொங்கல் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருப்பொருளில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன், ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியவை…
வணக்கம். இனிய பொங்கல், நல்வாழ்த்துகள். இன்று, பொங்கல், ஒரு உலகளாவிய திருவிழாவாக ஆகி விட்டது. உலகம் எங்கிலும், தமிழ் சமுதாயம், மற்றும் தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கக்கூடிய மனிதர்கள், இதை உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள். அதிலே நானும்கூட ஒருவன். இந்தச் சிறப்பான திருநாளை, உங்கள் அனைவரோடும் இணைந்து கொண்டாடுவது, என்னைப் பொறுத்தவரை, சௌபாக்கியம் நிறைந்த விஷயம்.
நம் தமிழர்களின் வாழ்க்கையிலே, பொங்கல், ஒரு சுகமான அனுபவமாக இருக்கின்றது; இதிலே, அன்னமளிப்பவரின் உழைப்பு, பூமி, மற்றும் சூரியனிடத்தில் நன்றியறிதல் உணர்வு வெளிப்படுகிறது. அதோடு கூட, இந்த திருவிழா நமக்கு, இயற்கை, குடும்பம், மற்றும் சமூகத்திலே, சமநிலையை ஏற்படுத்தும் பாதையைக் காட்டுகிறது. இந்த சமயத்திலே தேசத்தின் பல்வேறு பாகங்களிலே, லோஹ்டி, மகர சங்கராந்தி, மாக் பிஹூ, மற்றும் இன்னும் பிற பண்டிகைகளின் உற்சாகம் நிரம்பியிருக்கிறது.
நான் பாரதம், மற்றும் உலகெங்கிலும் வசிக்கின்ற, அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும், பொங்கலுக்கான, மற்றும் அனைத்துப் பண்டிகைகளுக்குமான, பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, உள்ளபடியே எனக்கு, என்ன இனிமையாக இருக்கிறதென்றால், அதாவது கடந்த ஆண்டு எனக்கு, தமிழ் கலாச்சாரத்தோடு தொடர்புடைய, பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. நான் தமிழ்நாட்டிலே, ஓராயிரம் ஆண்டுகள் பழமையான, கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் வழிபாடு செய்தேன்.
வாராணசியிலே, காசி தமிழ் சங்கமத்தின் போது, கலாச்சார ஒற்றுமையின் சக்தியை, ஒவ்வொரு கணமும்… நான் இணைந்திருந்தேன், நான் எங்கே இருந்தாலும், நான் அதை அனுபவித்தேன். நான் பாம்பன் பாலத்தைத் திறந்துவைக்க இராமேஸ்வரம் சென்றிருந்த போது, அப்போது தமிழ் வரலாற்றின், மகத்துவத்திற்கு, மீண்டும் ஒருமுறை சாட்சியாக இருந்தேன்.
நம்முடைய தமிழ் கலாச்சாரம், ஒட்டுமொத்த பாரதத்தின், பகிரப்பட்ட பாரம்பரியம் ஆகும். இது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின், பகிரப்பட்ட பாரம்பரியம் ஆகும். நான் ஒரே பாரதம் உன்னத பாரத த்தின் எந்த உண்ர்வைப் பற்றிக் கூறுகிறேன் என்றால், அதைப் பொங்கல் போன்ற பண்டிகை, மேலும் சக்தியுடையதாக ஆக்குகிறது.
நண்பர்களே, உலகின் கிட்டத்தட்ட அனைத்துக் நாகரீகங்களிலும், அறுவடையோடு தொடர்புடைய ஏதாவது ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்திலே, விவசாயிகள், வாழ்க்கையின் ஆதாரங்களக கருதப்படுகிறார்கள். திருக்குறளிலே, விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றி, விரிவான முறையிலே எழுதப்பட்டிருக்கிறது.
நம்முடைய விவசாயிகள், தேச நிர்மாணத்தின் பலமான அடித்தளங்கள். அவர்களின் முயற்சிகள் காரணமாக, தற்சார்பு பாரதம் இயக்கத்துக்கு, அதிக பலம் கிடைத்து வருகிறது. மத்திய அரசும் கூட, விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கப்படுவதில், உறுதிபூண்டிருக்கிறது, தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நண்பர்களே, பொங்கல் மங்கலத் திருநாள், நமக்கென்ன உத்வேகம் அளிக்கிறதென்றால், இயற்கையிடத்திலே, நன்றியறிதல், வெறும் சொற்களோடு மட்டும் தேங்கி விடக்கூடாது, அதை நாம், வாழ்க்கைமுறையின் அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
நமது மண்ணானது நமக்கு, இந்த அளவுக்குக் கொடுக்கிற போது, அதைப் பேணிப் பாகுகாக்கும் கடமையும், நமக்கிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு, மண்ணை ஆரோக்கியமாக வைத்திருப்பது, நீரைப் பாதுகாப்பது, மேலும் ஆதாரங்களை சமச்சீராகப் பயன்படுத்துவது, மிகவும் அவசியமானது. மிஷன் லைஃப், தாயின் பெயரில் ஒரு மரம், அமுத நீர்நிலைகள். இந்த இயக்கங்கள் எல்லாம், இந்த உணர்வைத் தான் முன்னெடுத்துச் செல்கின்றன.
நாம் விவசாயத்தை, அதிக நீடித்ததாக, மேலும் சுற்றுச்சுசூழலுக்கு உகந்ததாக ஆக்க, தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். வருகின்ற காலத்திலே, நீடித்ததன்மையுடைய விவசாயம், நீர் மேலாண்மை, நான் தொடர்ந்து கூறி வருகிறேன், ஒவ்வொரு சொட்டுக்கும்… அதிக பயிர். இயற்கை விவசாயம், அக்ரிடெக், மற்றும் மதிப்புக்கூட்டலின் பங்களிப்பு, மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இத அனைத்துத் துறைகளிலும், நமது இளைஞர்கள், புதிய எண்ணத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
சில மாதங்கள் முன்புதான், நான் தமிழ்நாட்டிலே, இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய, ஒரு மாநாட்டிலே பங்கெடுத்துக் கொண்டேன். அங்கே நான் என்ன பார்த்தேன் என்றால், நம்முடைய தமிழ் இளைஞர்கள், எத்தனை சிறப்பாக செயலாற்றுகிறார்கள் என்றால், அதாவது தொழில்சார் பெரிய பணிகளைத் துறந்து விட்டு, வயல்வெளிகளில் பணியாற்றும் அவர்கள் என்னை சந்தித்தார்கள். நான் விவசாயத்தோடு தொடர்புடைய நம்முடைய இளைஞர்களான தமிழ் நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், அதாவது அவர்கள், நீடித்ததன்மையுடைய விவசாயத்திலே, புரட்சி ஏற்படுத்தும் இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நம்முடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டுமென்றால், அதாவது நம்முடைய தட்டும் நிறைந்திருக்க வேண்டும், நம்முடைய பையும் நிறைந்திருக்க வேண்டும், மேலும் நம்முடைய பூமித்தாயும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நண்பர்களே, தமிழ் கலாச்சாரம், உலகத்தின் மிகவும் தொன்மையான, உயிர்ப்புடைய கலாச்சாரங்களிலே ஒன்று.
தமிழ் கலாச்சாரம், பல நூற்றாண்டுகளை இணைக்கிறது. அது வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டு, தற்காலத்திற்கு, முன்னேறும் பாதையைக் காட்டுகிறது. இந்த உத்வேகத்தின் துணையாலே, இன்றைய பாரதம், தன்னுடைய வேர்களிலிருந்து சக்தி பெற்று, புதிய சாத்தியக்கூறுகளை நோக்கி, முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இன்று பொங்கலின் இந்தப் புனிதமான வேளையிலே, நாம் என்ன நம்பிக்கையை உணர்கிறோம் என்றால், அதுவே பாரதத்தை முனேற்றிக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட பாரதம்? இது தனது கலாச்சாரத்தோடு இணைவுள்ள பாரதம். தன்னுடைய பூமிக்கு மரியாதை அளிக்கிறது. மேலும் எதிர்காலம் குறித்து, நம்பிக்கை நிரம்பி இருக்கிறது.
இனிய பொங்கல், நிறை நல்வாழ்த்துக்கள். வாழ்க தமிழ், வளர்க பாரதம். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும், பொங்கலுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள். வணக்கம்.
பிரதமர் மோடி பேச்சின் தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்




