26-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனைத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

nirmala seetharaman budget 2026 - 2026

2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்.1 ஞாயிற்றுக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சந்தித்து பட்ஜெட் குறித்து விளக்கினார்.

முன்னதாக, கடந்த ஜன.28 அன்று, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்தினார். தொடர்ந்து,2026-2027ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார்  இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத் தக்கது. 2024ல் இடைக்கால பட்ஜெட், வழக்கமான பட்ஜெட் என இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்ற வகையில்  இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் ஆகிறது.இவ்வகையில், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.

முன்னர், மொரார்ஜி தேசாய் 11 முறையும், ப. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும், மன்மோகன் சிங் 5 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில்  நிர்மலா சீதாராமன் மட்டுமே, ஒரே பிரதமரின் ஆட்சியின் கீழ், தொடர்ச்சியான ஆண்டுகளில் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது ஒரு சாதனைதான்!

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து விளக்கினார். அவருக்கு திரௌபதி முர்மு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் . 

பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து, நிதித்துறை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்றுதான் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது .

பட்ஜெட் உருவாக்கக் குழு:

மத்திய பட்ஜெட் உருவாக்கக் குழுவின் தலைவர் நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன்.  இந்தக் குழுவில்,  முதலில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அனுராதா தாக்கூர், வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, செலவினத்துறை செயலாளர் வும்லுன்மங் வுல்நம், நிதி சேவைத் துறை செயலாளர் நாகராஜூ, பொது சொத்துக்கள் நிர்வாகத்துறை மற்றும் முதலீட்டுத்துறை செயலாளர் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்கள் துறை செயலாளர் மோசஸ் சலாய் ஆகியோர் பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

இரவில் இருந்து பகலுக்கு!

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1999ம் ஆண்டு வரை, பிரிட்டிஷாரின் நேர வசதிக்கு ஏற்ற வகையில், மத்திய பட்ஜெட் தாக்கல் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  ஆனால், 1999ல் வாஜ்பாய் ஆட்சியில்,  நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணிக்கு மாற்றினார். இதன் மூலம் பிரிட்டிஷ் அடிமைப் பழக்கம் முடிவுக்கு வந்ததுடன்,  பட்ஜெட் குறித்த செய்திகளை ஊடகங்களில் விவாதிக்கவும்,  பொது மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வுடன் பேசவும் வசதியாக அமைந்தது

பிப்.1 தான் கணக்கு!

பட்ஜெட் தாக்கல் என்பது, பிப்ரவரி மாத கடைசியில் இருந்து வந்த நிலையில் 2016ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதியன்று மாற்றப்பட்டது.  2016ம் ஆண்டு தொடங்கி ஆங்கிலேயர் கால நடைமுறையான பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்வது மாற்றப்பட்டு, பிப்.1 என மாற்றப்பட்டது. இதுவும் பொதுமக்களின் வசதி கருதியே நிகழ்ந்தது. 

ஏப்ரல் 1ல் புதிய நிதி ஆண்டு தொடங்கும். பட்ஜெட் தாக்கலான ஒரு மாத காலத்துக்குள் மத்திய அரசின் புதிய கொள்கைகள், விதிமுறைகளுக்கு மாற அமைச்சகங்கள், வணிகங்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு போதுமான கால அவகாசம் கிடைக்காது. மேலும் மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைத்து, அமலுக்கு வருவதற்குள் புதிய நிதியாண்டு தொடங்கிவிடும். இதனால் பட்ஜெட் அமல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. 2017ல்  அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முதல்முறையாக பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய நடைமுறையைத் தொடங்கி வைத்தார். இதனால் அனைவருக்கும் போதிய அவகாசம் கிடைத்தது. இந்நிலையில் பிப். 1 இன்று ஞாயிற்றுக் கிழமை என்ற போதும், அந்த நடைமுறைப்படி, பட்ஜெட் தாக்கலானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories