திருவண்ணாமலை மக்கள் பயன்பெறும் வகையில் வருமானவரி சேவை மையம் துவக்கப்பட்டது. மையத்தை முதன்மை ஆணையர் சங்கர், பிரின்சிபல் கமிஷ்னர் தேவதாசன் துவக்கி வைத்தனர். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் குறைகளை சொல்வதற்காக வேலூர், சென்னை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு தேவையான பதிலை இங்கேயே பெற்றுக்கொள்ளலாம்.

