சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் : சரக்கு போக்குவரத்து பாதிப்பு

Published:

 

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி நாடு தழுவிய அளவில் லாரி ஸ்டிரைக் இன்று தொடங்கியது.

அக்டோபர் 1-ம் தேதி முதல் கோரிக்கையை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்தது. இதில் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இது தோல்வியில் முடிந்தது. நேற்று மாலை மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மோட்டார் காங்கிரஸ் நடத்தி வருகிறது.

இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான லாரிகள் இயக்கப்படாமல், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், பால், காய்கனிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்த போராட்டத்தால் தினமும் தினமும் லாரி உரிமையாளர்களுக்கு 1500 கோடி ரூபாய் வரையும், அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரையும் இழப்பு ஏற்படும் என்று மோட்டார் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய சங்கம் நடத்தும் இந்தப் போராட்டத்தில், அகில இந்திய டிரான்ஸ்போர்ட்டர்களை நல சங்கம் பங்கேற்கவில்லை. தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img